HomeGeneral'குமரிக்கண்டம் 2.0' கலெச்சனை ஏ.வி.ஆர்.ஸ்வர்ண மஹாலில் அறிமுகப்படுத்திய நடிகை ப்ரீத்தி முகுந்தன்!

‘குமரிக்கண்டம் 2.0’ கலெச்சனை ஏ.வி.ஆர்.ஸ்வர்ண மஹாலில் அறிமுகப்படுத்திய நடிகை ப்ரீத்தி முகுந்தன்!

Published on

தென்னிந்தியாவின் முன்னணி ஜூவல்லரி நிறுவனங்களில் ஒன்றான, ஏ.வி.ஆர். ஸ்வர்ணமஹால் ஜூவல்லரி ‘குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0’ என்ற நகை டிசைன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதற்கான நிகழ்ச்சியில் சென்னை அண்ணா நகர் ஏ.வி.ஆர். ஸ்வர்ண மஹால் ஜூவல்லரியில் கோலாகலமாக ஏற்பாடாகியிருந்தது. நடிகை ப்ரீத்தி முகுந்தன் கலந்துகொண்டு குமரிக்கண்டம் கலெக்ஷன் நகைகளை அறிமுகம் செய்தார்.

நகை அறிமுகம்குறித்து இயக்குநர் ஏ வி ஆர் சித்தாந்த் பேசியபோது, ”எங்களின் முந்தய குமரி கண்டம் கலெக்ஷனை பெரும் வெற்றியாக்கிய வாடிக்கையாளர்களுக்கு நன்றி. அதன் தொடர்ச்சியாகப் புதியதோர் உலகிற்கு நாங்கள் உங்களை அழைத்துச்செல்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம். குமரிக்கண்டம் என்றாலே, தொன்மையான, அழியாத ஒரு பாரம்பரியத்தைக் குறிக்கும். அதனை மையமாகக் கொண்டு, குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0 நகைகள், நம் முன்னோர்களின் கலைநுணுக்கத்தை, நவீன சாயலில் வழங்கும் ஒரு முயற்சியாகும். ஒவ்வொரு நகையும், அந்தத் தொன்மையான பரம்பரை மாறாமல், புதியதோர் அழகில் உருவாக்கப்பட்டுள்ளது.

நம் பாரம்பரியம் போற்றும் வகையில் அற்புத கலைநுணுக்கங்களோடு, உங்கள் வீட்டு இளவரசிக்கான, திருமண வைபவத்திற்கு ஏற்ற ஆயிரக்கணக்கான நகைகள் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது! கற்பனையை மிஞ்சிய குமரிக்கண்டத்து பொற் சிற்பி நெய்த திருவாபரணங்கள் இங்குக் கிடைக்கும்.

இந்தக் குமரிக்கண்டம் கலெக்ஷனின் சிறப்பு, இது முந்தைய கலெக்ஷனைவிட அதிக பரிசோதனைகளை எதிர்கொண்டு, அவற்றில் தோன்றிய பல புதுமைகளைச் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. இவை, உங்கள் பார்வைக்கு மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கை முறைமைகளில் ஒரு முக்கியமான பங்காக விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.மேலும் சிறப்பம்சமாக எங்களது அனைத்து ஷோரூம்களிலும் குமரிக்கண்டத்து உலகின் வழி எம்பெருமானின் வைபவத்துடன் கூடிய உற்சவ தரிசனம் நடைபெறுகிறது. அதனையும் வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்” என்றார்.

நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசியபோது, ”ஏ.வி.ஆர்.ஸ்வர்ண மஹாலுடன் இரண்டாண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளேன் குமரிக்கண்டம் கலெக்ஷன் 1.0′ நகைகளை நான் தான் அறிமுகம் செய்தேன். நமது வரலாற்றையும் பாரம்பரியத்தையும் நகைகள் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் அருமையான விஷயம் குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0அறிமுகப்படுத்துவதில் மிகவும் பெருமை கொள்கிறேன். இந்த அழகிய கலெக்ஷனை உங்கள் கண்களால் பார்க்க, உங்கள் இதயத்தில் உணர, ஏ.வி.ஆர். ஸ்வர்ண மஹால் ஜூவல்லரிக்கு வருகை தாருங்கள்” என்றார்.

ஏ.வி.ஆர். ஸ்வர்ணமஹால் குறித்து…

ஏ.வி.ஆர். ஸ்வர்ணமஹால் ஜூவல்லரி சேலத்தில் ஸ்வர்ணபுரி, கடைவீதி – 2 கிளைகள், சென்னை, புதுச்சேரி, தாரமங்கலம், மேட்டூர், ஈரோடு, ராசிபுரம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, அரூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர்-ஜெயநகர், டிக்கென்சன் ரோடு மற்றும் மல்லேஸ்வரம் ஆகிய இடங்களில் பரிசுத்தமே எங்கள் பாரம்பரியம் என்ற கொள்கையோடு இயங்கி வருகின்றன.

Latest articles

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் பத்தாவது திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் 1540வது படமாக உருவாகும் இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத...

'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கியுள்ள 'பிளாஸ்ட்'...

நல்ல கதைகளைக் கொடுக்க வேண்டும் என்று யோசிக்கும் வெகு சிலரில் மீரா கதிரவனும் ஒருவர்! -‘ஹபீபி’ பட விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பற்றி இயக்குநர் பார்த்திபன் பேச்சு

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு...

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!!

‘சேயோன்’ - சிவகார்த்திகேயன், சக்திவாய்ந்த ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, அவருடன் பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடிக்கும், இத்திரைப்படத்தின்...

More like this

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் பத்தாவது திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் 1540வது படமாக உருவாகும் இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத...

'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கியுள்ள 'பிளாஸ்ட்'...

நல்ல கதைகளைக் கொடுக்க வேண்டும் என்று யோசிக்கும் வெகு சிலரில் மீரா கதிரவனும் ஒருவர்! -‘ஹபீபி’ பட விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பற்றி இயக்குநர் பார்த்திபன் பேச்சு

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு...