HomeGeneralகதைக்களம் மதுரை... முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்... பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் 'வதந்தி...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

Published on

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு ஸ்ட்ரீமிங் தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் திரில்லர் சீரிஸான ‘வதந்தி’ சீரிஸின் இரண்டாவது சீசனான ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த 8 எபிசோடுகள் கொண்ட சீரிஸை, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். இதில் எம். சசிகுமார், எஸ்.ஐ. மூசா ரஸா என்ற நேர்மையான, உண்மையைத் தேடி விடாமுயற்சியுடன் செயல்படும் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மதுரையின் கலாச்சாரப் பின்னணியையும், உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவின் துடிப்பையும் கதையுடன் இயல்பாக இணைக்கும் இந்த சீசன், வதந்தி தொடரின் அடையாளமான ‘வதந்தி Vs உண்மை’ என்ற மையக்கருவை மேலும் ஆழமாக ஆராய்கிறது. பல அடுக்குகள் கொண்ட திரைக்கதை, சிக்கலான கதாபாத்திரங்கள், உணர்வுபூர்வமான உறவுகள் ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களை இறுதி வரை பரபரப்பில் வைத்திருக்கும் வகையில் கதை நகர்கிறது.

நெடுஞ்சாலை திட்டத்தின் தொடக்க விழாவின்போது எலும்புக்கூடு எச்சங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. அந்த விசாரணையை மேற்கொள்ளும் எஸ்.ஐ. மூசா ரஸா, ‘மணி’ என்ற மர்மமான கைதியை நோக்கி செல்லும் எதிர்பாராத தடயங்களை கண்டுபிடிக்கிறார். அரசியல் அழுத்தம், ஊடக பரபரப்பு மற்றும் மனித மனங்களின் பலவீனங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் உண்மையை வெளிக்கொணர அவர் மேற்கொள்ளும் போராட்டமே இந்த சீசனின் மையக்கதை.

பிரைம் வீடியோ இந்தியா – ஒரிஜினல்ஸ் பிரிவு இயக்குநரும், தலைவருமான நிகில் மாதோக் கூறுகையில்,

“தென்னிந்திய கதைகள் உலகம் முழுவதும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் ‘வதந்தி’ எங்களுக்கு மிகவும் பெருமை சேர்த்த தொடர்களில் ஒன்று. முதல் சீசன், வதந்திக்கும் உண்மைக்கும் இடையிலான எல்லையை மிகவும் வித்தியாசமாக சித்தரித்து, சஸ்பென்ஸ் குற்ற திரில்லர் வகையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தது. இப்போது இரண்டாவது சீசனை உலகம் முழுவதும் ரசிகர்களிடம் கொண்டு செல்லும் மகிழ்ச்சி எங்களுக்கு உள்ளது. ஆண்ட்ரூ லூயிஸ் மீண்டும் இயக்குநராக இணைந்திருப்பதும், மதுரையின் கலாச்சாரப் பின்னணியில் நகரும் இந்த பரபரப்பான கதை தொடரை மேலும் உயர்த்தியுள்ளது. புஷ்கர் – காயத்ரியுடன் எங்கள் கூட்டணி தொடர்வது பெருமைக்குரியது. கலாச்சார வேர்களை இழக்காமல் உலகளாவிய ரசிகர்களை கவரும் கதைகளை உருவாக்கும் அவர்களின் திறமை அபாரமானது. இந்த சீசனும் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது,” என்றார்.

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் – காயத்ரி கூறுகையில்,

“சஸ்பென்ஸ், உண்மை மற்றும் மனிதர்களின் பார்வை ஆகியவற்றின் தனித்துவமான கலவையைத் தக்கவைத்துக் கொண்டே, உணர்வுபூர்வமாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் இருக்கும் ஒரு கதையை இந்த இரண்டாவது சீசன் சொல்கிறது. ஆண்ட்ரூ லூயிஸ் மீண்டும் இந்தக் கதையை சிறப்பாக உயிர்ப்பித்துள்ளார். தொடரின் அடையாளத்தைப் பாதுகாத்தபடியே, அதை புதிய திசையில் கொண்டு சென்றுள்ளார். சசிகுமார் மற்றும் முழு நடிகர் குழுவும் கதைக்கு மிகுந்த ஆழத்தை அளிக்கும் வகையில் அசாதாரணமான நடிப்பை வழங்கியுள்ளனர். கலாச்சார வேர்களைக் கொண்ட கதைகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பிரைம் வீடியோவுக்கு நன்றி. இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுடன் ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’யை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்று தெரிவித்தனர்.

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

More like this

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...