HomeMovie Reviewஆழி சினிமா விமர்சனம்

ஆழி சினிமா விமர்சனம்

Published on

கடத்தல் அதுஇதுவென குற்றச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிற, பெரும் பணக்காரரான மூர்த்தி என்பவரின் மகளை வறுமைச் சூழலில் வழ்கிற குடும்பத்துப் பையன் காதலிக்கிறான். அவரது மகளும் அவனைக் காதலிக்கிறாள். அந்த காதலும் காதலனையும் பிடிக்காத மூர்த்தி, அந்த காதலனை போட்டில் வைத்து கொன்று கடலில் தூக்கிப்போட்டுவிட தீர்மானிக்கிறார். தீர்மானித்ததை செயல்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார். அவரிடமிருந்து அவனால் தப்பிக்க முடிந்ததா இல்லையா என்பதே ஆழியின் திரைக்கதை…

மூர்த்தியாக வருகிற சரத்குமார், காதலுக்கு எதிரியாக நிற்கிற கொடூர குணம் கொண்ட அப்பாக்கள் எப்படி நடந்துகொள்வார்களோ அப்படியே நடந்து கொள்கிறார். அதில் வில்லனாக பல படங்களில் நடித்த அனுபவம் தெரிகிறது.

அவரது மகளாக தேவிகா சதீஷ் அழகாக இருக்கிறார். ஹீரோவை காதலிக்கும் வழக்கமான காதலியாக கச்சிதமாக கடமையாற்றுகிறார்.

காதலனாக வருகிற இந்திரஜித் ஜெகஜித், அப்பாவி காதலனாக எல்லாவிதத்திலும் பொருத்தமாக இருக்கிறார். அவருக்க கொடுக்கப்பட்ட காதலிக்கிற, காதலியின் அப்பாவிடம் அடிபட்டு ரத்தம் சிந்துகிற வேலையையும் சரியாகச் செய்திருக்கிறார்.

பிரபல சினிமா பி ஆர் ஓ நிகில்முருகன் கறிவேப்பிலை போல் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் படத்தின் ஆரம்பக் காட்சியின் பரபரப்புக்கு பக்காவாக உதவியிருக்கிறார்.

படத்தில் இன்னும் சில கேரக்டர்களை தவிர யாருமில்லை. அந்த ஒருசிலருக்கு ஜஸ்ட் தலை காட்டுகிற வாய்ப்பு மட்டுமே.

கடல், கடலுக்குள் போட், அதில் ஒரு காதலனுக்கும் காதலனின் அப்பாவுக்குமான மோதல் என்ற வட்டத்துக்குள் கிட்டத்தட்ட படத்தின் பெரும்பாலான காட்சிகள் அடங்கிவிட, ஆனந்த் என் நாயரின் ஒளிப்பதிவின் நேர்த்தி கவனம் பெறுகிறது.

ஜாஸி கிஃப்ட் இசையில் பாடல்கள் மனதில் பதியாவிட்டாலும் கேட்கும்போது இதமாகவே இருக்கிறது. வில்லியம் ஃப்ரான்சிஸ் பின்னணி இசை திரைக்கதையிலிருக்கும் பரபரப்பை அதிகரிக்கிறது.

உண்மையான காதல் என்பது கடலைவிட ஆழமானது என்பதால் கடலின் பெயர்களில் ஒன்றான ‘ஆழி’யை படத்துக்கு தலைப்பாக வைத்த இயக்குநர் மாதவ் ராமதாஸன், கதை திரைக்கதையை இன்னும் கொஞ்சம் ஆழமாக அழுத்தமாக உருவாக்கியிருக்கியிருந்தால் ஆடியன்ஸின் ரெஸ்பான்ஸ் அதிரிபுதிரியாக இருந்திருக்கும்!

Rating 2.5 / 5

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...