HomeCinemaசிவ சம்போ சினிமா விமர்சனம்

சிவ சம்போ சினிமா விமர்சனம்

Published on

சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டும் திரைப்படங்களின் வரிசையில் மற்றுமொரு படம்.

இளம்பெண் ஷிவானிக்கு திருமணமாகிறது. திருமணம் செய்துகொண்டவன், தன்னைப் போலவே பலரை திருமணம் செய்து, அவர்களை அடைத்து வைத்து தவறான முறையில் பயன்படுத்துபவன் என்பதை தெரிந்து கொள்கிறாள். ஒரு கட்டத்தில் அவன் அவளை ஒரு அமைச்சரின் காமவெறிக்கு பலிகொடுக்க தயாராகிறான்.

அவள் அந்த ஆபத்தான சூழ்நிலையிலிருந்து தப்பிக்க வேண்டும்; தன்னைப் போலவே சிக்கியிருக்கும் மற்ற பெண்களையும் காப்பாற்ற வேண்டும் என நினைக்கிறாள். நினைத்ததை அவளால் செய்ய முடிந்ததா இல்லையா என்பது மீதிக்கதை.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதை. அதற்கேற்றபடி திருமண மோசடி கும்பலை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க எடுத்துக் கொள்ளும் முயற்சியாகட்டும், அந்த கும்பலை வெட்டிச் சாய்க்க வாய்ப்பு கிடைக்கும்போது வெறியேறி சம்பவம் செய்வதாகட்டும் தன்னால் இயன்றளவில் சிங்கப் பெண்ணாக சீற்றம் காட்டியிருக்கிறார் ஷிவானி. ஹீரோவுடன் ரொமான்ஸ், டூயட் பாட்டு என இன்னொரு பக்கம் ஜாலியாகவும் வலம் வருகிறார்.

ஒரே நபர் சூழ்ச்சியான அணுகுமுறையால் பல பெண்களை திருமணம் செய்து அவர்களின் வாழ்க்கையை சீரழித்த சம்பவங்கள் நம் நாட்டில் நிறைய நடந்ததுண்டு. அப்படி சூழ்ச்சி செய்து பெண்களை நாசமாக்குகிற கதாபாத்திரத்தில் பகவதி பாலா. டெரரான விஷயங்களைச் செய்யும் அவர் முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டிருப்பது கவனம் ஈர்க்கிறது. அவரை விட அவரது கும்பலில் உள்ள பெண்கள் ரவுடித்தனத்தை ரசித்துச் செய்திருக்கிறார்கள்.

ஹீரோயினை காதலிப்பது, அவளை வில்லன் கும்பலிடம் பறிகொடுப்பது, வில்லன்களை பழி வாங்க களமிறங்குவது என கதாநாயகனுக்கான பங்களிப்பை பரவாயில்லை என்று சொல்லும் அளவில் செய்திருக்கிறார் தில் நட்ராஜ். கதைப்படி அவர் ஹைகிரேடு போலீஸ் ஆஃபீஸர். அவரது உடற்கட்டில் அதற்கான கெத்து மிஸ்ஸிங்.

இமான் அண்ணாச்சி குழந்தைகளுக்கும்கூட பிடித்தவர். அவரை திருச்சி சாதனாவுடன் கோர்த்துவிட்டு காமெடி என்ற பெயரில் ஒரு மாதிரியான ஆபாச காட்சியை எடுத்துக் கோர்த்திருக்கிறார்கள்.

கதையின் நாயகி சமுக விரோதிகளை வதம் செய்யும் முன் வருகிற திசையெங்கும் கயவர் கூட்டம் பாடலுக்கு ஆக்ரோஷம் பொங்கும் இசையைக் கொடுத்திருக்கும் ஏ சி ஜான்பீட்டர் பின்னணி இசையில் குறை வைக்கவில்லை. எளிமையான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் படத்துக்கேற்ற எளிமையான ஒளிப்பதிவால் காட்சிகளை கச்சிதமாக பதிவு செய்திருக்கிறார் மஹிபாலா.

காமவெறி பிடித்த ஆண்களால் பெண்கள் பல விதங்களில் பாதிக்கப்படுகிறார்கள். அதில் திருமணம் என்கிற பெயரில் நடக்கும் கொடுமைகள் உயிரை உலுக்குபவை. அதை மையக்கருவாக எடுத்துக் கொண்டு, ஹீரோ, ஹீரோயின் உட்பட பல புதுமுகங்களோடு சில பிரபல நடிகர்களை சேர்த்துக் கொண்டு, சிம்பிள் பட்ஜெட்டில்,  கமர்சியல் அம்சங்கள் கலந்து இயக்குநர் பகவதி பாலா இயக்கியிருக்கும் இந்த படம் வெற்றிபெறுவதில் தடுமாறினாலும், சமூக விழிப்புணர்வூட்டும் நோக்கத்திலிருந்து தடம்மாறவில்லை.

Rating 3 / 5

 

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...