HomeMovie Reviewகப்புள் ஃபிரண்ட்லி சினிமா விமர்சனம்

கப்புள் ஃபிரண்ட்லி சினிமா விமர்சனம்

Published on

ஒரு ஈகோ மோதலில் பிரிகிற காதலர்கள் மீண்டும் சேர்கிறார்கள். சேர்ந்தபின் பழைய மகிழ்ச்சி விலகிப் போய்விடுகிறது. ஆனாலும், முன்பை விட காதல் அதிகரிக்கிறது. அது படம் பார்க்கும் நம்மை இனம்புரியாத உணர்வுக்குள் தள்ளிவிடுகிறது.

பிரிவதற்கு முன் அவர்களிடம் எப்படியான மகிழ்ச்சி சூழ்ந்திருந்தது, பிரிவு எதனால் நிகழ்ந்தது, பிரிந்தவர்கள் எப்படி சேர்ந்தார்கள், சேர்ந்தபின் என்னவானது என்ற கேள்விகளுக்கு பதில்களாய் விரிகிறது ‘கப்புள் ஃபிரண்ட்லி’யின் ஸ்க்ரீன்பிளே.

நாயகன் சந்தோஷ் சோபனுக்கு எந்த உணர்வுக்கு எந்தளவில் நடிக்க வேண்டும் என தெரிந்திருக்கிறது. அதனாலேயே நடிப்பு பிடித்துப்போய் விடுகிறது.

நாயகி மானசா வாரணாசியும் நடிப்பில் சளைத்தவரில்லை. உற்சாகமூட்டவும் செய்கிறார்; மனம் உருகவும் வைக்கிறார்.

காமெடிக்கு ஒட்டிக் கொண்டிருப்பவர் போல நினைக்கவைத்து கதையின் முக்கியமான கட்டங்களிலும் எட்டிப் பார்க்கிறார் யோகிபாபு.

சுனில், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட மற்றவர்கள் முக்கியத்துவமிக்க கேரக்டர்களில் வந்து போகிறார்கள்.

தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு சென்னையை நான்கைந்து முறை முழுமையாக சுற்றிப் பார்த்த ஃபீலிங் தருகிறது. கதையின் உணர்வுகள் புரிந்து பின்னணி இசை தந்திருக்கிறார் ஆதித்யா ரவீந்திரன்.

பெரும்பாலான காதலர்கள் காதலுக்கு மரியாதை தருவதை விட்டுவிலகி, தாறுமாறான பாதைகளில் பயணிக்கும் காலகட்டத்தில் இந்த படத்தில் காதலர்கள் காதலுக்கு தருகிற மதிப்பு அத்தனை சிலிர்ப்பாக இருக்கிறது. காட்சிகள் அத்தனையிலும் உயிரோட்டம் ததும்புகிறது.

கப்புள் ஃபிரண்ட்லி – காதலுக்கு மரணமில்லை!

Rating 3.5 / 5

 

 

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...