HomeCinemaவிக்ரம் பிரபு _ எல் கே அக்சய் குமார் நடித்த சிறை திரைப்படம் ஜனவரி 23...

விக்ரம் பிரபு _ எல் கே அக்சய் குமார் நடித்த சிறை திரைப்படம் ஜனவரி 23 முதல் ZEE5 தமிழில் பிரீமியர் ஆகிறது!

Published on

ஜீவா மற்றும் ஆண்ட்ரியா ஜெரமையா நடித்த சமீபத்திய பொங்கல் பிராண்ட் திரைப்படம் உள்ளிட்ட பல வெற்றிகரமான ஒரிஜினல் சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்களுக்குப் பிறகு, தமிழ் ZEE5 தனது பிராந்திய ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு படைப்புகளை வருகிறது.

அந்த வரிசையில் பெரும் பாராட்டுகளைக் குவித்த கிரைம் – நீதிமன்ற டிராமா திரைப்படமான ‘சிறை’ திரைப்படம் ஜனவரி 23, 2026 முதல் தமிழ் ZEE5 தளத்தில் பிரீமியர் ஆகிறது. இப்படத்தை இயக்குநர் தமிழ் கதையை மையமாக வைத்து, அவருடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி. விக்ரம் பிரபு, எல் கே அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் மற்றும் அனந்தா தம்பிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் எல் கே அக்ஷய் குமாரின் அறிமுகப் படம். தமிழ் இயக்குநராக அறிமுகமான அவரது முந்தைய ‘டாணாக்காரன்’ படத்திற்குப் பிறகு, விக்ரம் பிரபு – தமிழ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படம் ஜனவரி 23, 2026 முதல் தமிழ் ZEE5 தளத்தில் பிரீமியர் ஆகிறது.

ஒரு கைதியை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் பணியின் போது, ஒரு காவல் அதிகாரிக்கு ஏற்படும் சிக்கல்கள், அமைப்பு ரீதியான அழுத்தங்கள், மனிதநேய உணர்வுகள் மற்றும் நெறிமுறை முரண்பாடுகள் ஆகியவற்றின் நடுவே சிக்கிக்கொள்ளும் ஒரு நேர்மையான காவல் அதிகாரியின் பயணமே இப்படத்தின் மையக் கதை. அதில் தீவிரமான நீதிமன்ற நாடகமும் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் டிஜிட்டல் வெளியீடு குறித்து விக்ரம் பிரபு கூறியதாவது: “‘சிறை’ என் நடிப்புப் பயணத்தில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான, மனதுக்கு நெருக்கமான திரைப்படங்களில் ஒன்று. என் கதாபாத்திரம் கடமையால் கட்டுப்பட்டவன்; அதே நேரத்தில் அவன் பணியாற்றும் அமைப்பையே கேள்வி கேட்பவன். இந்த படம் தமிழ் ZEE5 வழியாகப் பரந்த ரசிகர்களை அடையப் போவது எனக்கு மிகுந்த உற்சாகம் தருகிறது. எல்லா பிராந்தியங்களிலும் உள்ள பார்வையாளர்கள் இந்தக் கதையை அனுபவிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.”

தன் கதாபாத்திரம் குறித்து எல் கே அக்ஷய் குமார் கூறியதாவது: “இந்த படம் நடிகராக எனக்கு பெரும் சவாலாக இருந்தது. என் கதாபாத்திரம் முழுமையாக நல்லவன் அல்லது கெட்டவன் என வரையறுக்க முடியாதவன். சூழ்நிலைகளும் முடிவுகளும் அவனை உருவாக்குகின்றன. ‘சிறை’ படம் எனக்கு அறிமுகப்படமாக அமைந்தது எனக்குப் பெருமை. இது தமிழ் ZEE5-இல் வெளியாகிறது என்பதில் அளவில்லா மகிழ்ச்சி. வலுவான உள்ளடக்கத்தைக் கொண்ட சினிமாவை மதிக்கும் தளம் அது. இதன் மூலம் அனைவரும் இப்படத்தை ரசிப்பார்கள் என நம்புகிறேன்.”

அழுத்தமான கதை சொல்லல், பரபரப்பான கதாபாத்திரங்கள் மற்றும் சமூக ரீதியான ஆழமான கருத்துகள் ஆகியவற்றுடன், 2026 தொடக்கத்தில் வெளியாகும் ஓடிடி வெளியீடுகளில் முக்கியமான தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘சிறை.’

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...