Thursday, January 22, 2026
spot_img

Published on

தி ராயல் காலேஜ் ஆஃப் ஆப்ஸ்டட்ரிஷன் அண்ட் கைனகாலஜிஸ்ட்‘ (RCOG) என்பது உலகம் முழுவதும் உள்ள பெண்களின் உடல்நலத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்ட சர்வதேச நிறுவனம்.

யு.கே.வில் அமைந்துள்ள இந்த அமைப்புக்கு யூ.கே.வுக்கு வெளியே, மகப்பேறு மருத்துவர்கள், மகளிர் நோய் மருத்துவர்கள் என அதிக உறுப்பினர்களைக் கொண்ட நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது!

AICC ROCG இன் தெற்கு மண்டலத்து வருடாந்திர கருத்தரங்கு, RCOG தமிழ்நாடு கூட்டமைப்புடன் (ATNROCG) இணைந்து, 2024 ஜனவரி 20, 21 ஆகிய இரண்டு நாட்கள் சென்னையில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில், சென்னையிலுள்ள சீதாபதி கிளினிக் & ஹாஸ்பிட்டலின் சீனியர் OBGYN மருத்துவர் உமா ராம் அவர்களை, AICC RCOG அமைப்பின் அகில இந்தியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சீனியர் OBGYN அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் சுமனா மனோகர் தெற்கு மண்டலத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

RCOGஇன் தலைவரான மருத்துவர் Ranee Tahkkar, லண்டனில் இருந்து காணொளி வாயிலாகக் கலந்து கொண்டார்.

தேசிய சுகாதார இயக்கத்தின் தமிழ்நாட்டு திட்ட இயக்குநர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்தரங்கைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்..

பெண்கள் மற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பைக் குறித்த ஆலோசனைகளும், அதை மையப்படுத்திய உரைகளுமே கருத்தரங்கின் கருப்பொருளாக அமைந்தது.

தாய் மற்றும் சேய் இறப்பு விகிதத்தைக் குறைப்பதும், உலகளாவிய இனப்பெருக்க ஆரோக்கியத்தை உதுதி செய்தலும், கருத்தரங்கின் நிலையான வளர்ச்சி இலக்குகளாகும். நோயாளியின் பாதுகாப்பே இலக்குகளில் முதன்மையானது என்பதால், அதுவே கருத்தரங்கின் கருப்பொருளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

இந்த கருத்தரங்கில் கர்ப்பப்பை மற்றும் அதிக சிக்கலான பிரசவம் குறித்தும், வெஜினல் சொசைட்டி ஆஃப் இந்தியக் கூட்டமைப்பின் பெண் பிறப்புறுப்பு அறுவை சிகிச்சை குறித்தும் இரண்டு பயிலரங்குகள் நடந்தன.

தனியார் மருத்துவமனைகள், PCIME-ல் பதிவு செய்வதற்காக ஓர் அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான்கு சர்வதேச மற்றும் பல புகழ்மிக்க பேராசிரியர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு, பிள்ளைப்பேற்று வலி, பிரசவம், மகளிர் நல அறுவை சிகிச்சை, மற்றும் நவீன சிகிச்சை முறைகள் ஆகியவைப் பற்றி உரையாற்றினர். சமீபத்தில் ரமோன் மக்சேசே விருது பெற்ற பத்மஸ்ரீ மருத்துவர் ரவி கண்ணன் அவர்கள், புற்றுநோய் தடுப்பிற்கான சமூகப் பங்களிப்பைக் கட்டமைப்பது பற்றி உரையாற்றினார்.

Latest articles

பாரத்- சான்வி மேக்னா நடிப்பில் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த...

‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன்,...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு...

தீவிரமான படைப்பாக ‘தடயம்.’ மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தில் சமுத்திரகனி!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி...

More like this

பாரத்- சான்வி மேக்னா நடிப்பில் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த...

‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன்,...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு...
error: Content is protected !!