இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படம் ‘ரெபல்.’
அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கியிருக்கும் இந்த படத்தில் மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜீ. வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
உண்மை சம்பவங்களை தழுவிய அதிரடி ஆக்சன் என்டர்டெய்னரான இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிலம்பரசன் டி ஆர் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்தியிருக்கிறார்.
ஃபர்ஸ்ட் லுக்கில் கதையின் நாயகனான ஜீ.வி. பிரகாஷ் குமாரின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது” 1980களில் நடைபெற்ற சில உண்மை சம்பவங்களை தழுவி திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. கதை, கல்லூரியை களமாக கொண்டிருக்கிறது. கல்லூரி மாணவர்களுக்கான அரசியலும் பேசப்பட்டிருக்கிறது. ஜீ.வி. பிரகாஷ் குமாரின் திரையுலக பயணத்தில் இந்த படம் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தும்” என்றார்.
படக்குழு:-
திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.
படத்தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாள, கலை இயக்கத்தை உதயா கவனிக்கிறார். ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அதிரடி சண்டை காட்சிகளை சக்தி சரவணன் அமைத்திருக்கிறார்.