HomeGeneralமக்கள் இந்திய நாட்டின் பிரதமராக யாரை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்? தேர்தல் பெருவிழாவின் மெகா முடிவுகள் உடனுக்குடன்...

மக்கள் இந்திய நாட்டின் பிரதமராக யாரை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்? தேர்தல் பெருவிழாவின் மெகா முடிவுகள் உடனுக்குடன் உங்கள் புதிய தலைமுறையில்…

Published on

அடுத்த 5 வருடங்கள் இந்திய நாட்டின் தலை எழுத்தைத் தீர்மானிக்கும் நேரமிது. ஒட்டுமொத்த இந்தியர்களும் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு தங்களின் அடுத்த பிரதமர் யார் என்பதை அறியும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்தியத் தேர்தலின் முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையின் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒவ்வொரு தொகுதிக்கும் பிரத்யேக செய்தியாளர் குழுவை நியமித்து உடனுக்குடன் தேர்தல் செய்திகளை வழங்கியது புதிய தலைமுறை. தேர்தல் சிறப்பு பேருந்து மூலம் 40 தொகுதிகளிலும் மக்களோடு மக்களாக களத்தில் இறங்கி தேர்தல் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினோம். இது தமிழக மக்களிடம் வெகுவான வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது…

தேர்தல் பெருவிழாவின் மெகா முடிவுகள்…

ஜூன் 4, 2024 அன்று மாபெரும் ஜனநாயகப் பெருவிழாவின் முடிவுகள் வெளிவர இருக்கின்றன… ஒவ்வொரு தொகுதியின் வாக்காளர்கள், அவர்களின் வெற்றி வாய்ப்புகள், வாக்கு எண்ணிக்கையின் நொடிக்கு நொடி நிலவரம் மற்றும் வெற்றி தோல்விக்கான காரணங்கள் என்னவென்று அலசி ஆராய்ந்து, தேர்தல் முடிவு நாள் முழுக்க பிரத்யேக ஒளிபரப்புக்கு தயாராகி வருகிறது புதிய தலைமுறை…

40 தொகுதிகளுக்கும் 40 செய்தி அணிகள் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து செய்தி சேகரிக்கும் அணிகள் என்று 500-க்கும் மேற்பட்ட நபர்கள் வாக்கு எண்ணிக்கை நாளன்று பணியாற்றவிருக்கின்றனர். ஜூன் 4, செவ்வாய் அதிகாலை 5 மணி முதலே புதிய தலைமுறையின் தேர்தல் சிறப்பு நேரலை ஆரம்பிக்க இருக்கிறது!

மீண்டும் தேர்தல் சிறப்பு பேருந்து…

மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற தேர்தல் சிறப்பு பேருந்து மீண்டும் ஜூன் 4 அன்று சென்னை முழுக்க வலம் வர இருக்கிறது. இதனுடன் லைவ் டிவியும் இருப்பதால் தேர்தல் முடிவுகளை மக்கள் அவ்வப்போது கண்டறிய முடியும். அதிகாலை 5 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் இருந்து பேருந்து புறப்பட இருக்கிறது!

 

Latest articles

சீயான் விக்ரம் பிறந்த நாளில் வெளியான புதுப்பட அறிவிப்பு! ஆனந்த் சங்கர் இயக்குகிறார்.

https://www.youtube.com/watch?v=VL34SYoMS_g சீயான் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புதிய படம் ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்ய ஜோதி...

பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நடிகர் பினு. டி. ஜான் போஸ்கோ… திரைப்பிரபலங்களின் பாராட்டு மழையில் நனைந்து உற்சாகம்!

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கிய 'டீன்ஸ்' படத்தில் சர்வேஷ் கதாபாத்திரத்தில் நடித்த பினு. டி. ஜான் போஸ்கோ பத்தாம் வகுப்பிலிருந்து  பதினொன்றாம்...

புராண கால வரலாற்று பின்னணியில் ஆரி அர்ஜுனன் நடிப்பில் மிரட்டலான ஆக்சன் திரில்லர் ‘பகவான்’ வெளியீட்டுக்கு தயாராகிறது!

வித்தியாசமான கதையம்சத்துடன்,  சு.காளிங்கன் இயக்கியுள்ள திரைப்படம் 'பகவான்.' ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பூஜிதா பொன்னாடா நடித்துள்ளார்....

More like this

சீயான் விக்ரம் பிறந்த நாளில் வெளியான புதுப்பட அறிவிப்பு! ஆனந்த் சங்கர் இயக்குகிறார்.

https://www.youtube.com/watch?v=VL34SYoMS_g சீயான் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புதிய படம் ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்ய ஜோதி...

பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நடிகர் பினு. டி. ஜான் போஸ்கோ… திரைப்பிரபலங்களின் பாராட்டு மழையில் நனைந்து உற்சாகம்!

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கிய 'டீன்ஸ்' படத்தில் சர்வேஷ் கதாபாத்திரத்தில் நடித்த பினு. டி. ஜான் போஸ்கோ பத்தாம் வகுப்பிலிருந்து  பதினொன்றாம்...