HomeMovie Reviewகீனோ சினிமா விமர்சனம்

கீனோ சினிமா விமர்சனம்

Published on

ஹாரர் படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிற உளவியல் திரில்லர்.

சிறுவன் தரண் திடீர் திடீரென தனக்கு முன் தோன்றும் பேய் போன்ற நபரைக் கண்டு பயப்படுகிறான். அவனது பெற்றோர் அவனை ஏதேனும் அமானுஷ்ய சக்தி சுற்றி வளைக்கிறதோ என்று சந்தேகப்படுகிறார்கள். அதற்கான பரிசோதனைகளை நடத்தினால் அப்படி எதுவும் இல்லை என தெரிகிறது. அடுத்ததாக மனநல மருத்துவர் மூலம், அவன் ஏன் பயப்படுகிறான் என்பதை தெரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்குகிறார்கள். அதன் மூலம் அவன் வினோதமான பிரச்சனையில் சிக்கியிருப்பது தெரிகிறது. அந்த பிரச்சனை நாம் இதுவரை கேள்விப்படாததாக இருக்கிறது…

தன் எதிரிலும் கனவிலும் அடிக்கடி தோன்றும் கீனோ என்ற உருவத்தைக் கண்டு பயப்படுவதும், தூக்கமின்றி தவிப்பதும், கையில் கிடைத்த பொருளால் அந்த உருவத்தை தாக்குவதுமாக தரணான வருகிற கந்தர்வா தனது கதாபாத்திரத்தின் தன்மையை தன் நடிப்பில் மிகச்சரியாக பிரதிபலித்திருக்கிறார்.

தரணுக்கு அப்பாவாக வருகிற மகாதாரா பகவத்தும், அம்மாவாக வருகிற ரேணு சதீஷும் பிள்ளை படும் அவஸ்தைகளைக் கண்டு பதறுவதும் அவனை பிரச்சனையிலிருந்து மீட்க முயற்சிப்பதும் உணர்வுபூர்வமாக இருக்கிறது.

மனநல மருத்துவராக வருபவர், கீனோபோபியா பற்றி விளக்குவது ‘மனிதர்களுக்கு இப்படியெல்லாம் கூடவா பிரச்சனைகள் உருவாகும்?’ என ஆச்சரியப்பட வைக்கிறது. அவர் விளக்கும் விதம் மிலிட்ரி வகுப்பெடுப்பதுபோல் கம்பீரமாக இருக்கிறது.

மற்ற பாத்திரங்களில் வருகிற மிகச்சிலர் கச்சிதமாக நடித்திருக்க, ஆலிவர் டேனியின் ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைந்திருக்கிறது.

படத்தை தயாரித்திருக்கிற கிருத்திகா காந்தி படத்தொகுப்பாளராகவும் பங்களித்திருக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல் வரிகள், இசை, இயக்கம் என பலதுறை பணிகளை இழுத்துப்போட்டு செய்திருக்கும் ஆர் கே திவாகர், ஹாரர் படம் போல் தொடங்கி, உள்வியல் திரில்லராக கதையை நகர்த்தியிருப்பது விறுவிறுப்புக்கு கேரண்டி தருகிறது.

இந்த படத்தின் மூலம் சமூகத்துக்கு கிடைப்பது, ‘நம் வீட்டுப் பிள்ளைகள் வினோதமான பிரச்சனைகளை சந்திக்கும்போது பேய், பிசாசு, மாந்திரீகம் என அமானுஷ்ய விஷயங்களை மட்டுமே சுற்றி வராமல், மனநல மருத்துவரை நாடுவது அவசியம்’ என்கிற விழிப்புணர்வு!

Rating 3 / 5

Latest articles

கர சினிமா விமர்சனம்

இந்த கதையின் ஹீரோ இளைஞன் கரசாமி. அவனது அப்பா இறந்து போகிறார். அவரை தங்களது சொந்த நிலத்தில், தங்கள்...

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, பிரபல பாடகி சாருலதா மணி எழுதி இசையமைத்த ‘தென்றலில்’  சுயாதீன பாடல்!

https://www.youtube.com/watch?v=w1kKo7v-z6k இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து உருவான 'தக் லைஃப்' திரைப்படத்தில் இடம்பெற்று, மாபெரும் வரவேற்பைப் பெற்ற...

டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்ட மூன்றாம் பிறை’ மே 1 முதல் Amazon Prime Video தளத்தில் பார்த்து ரசிக்கலாம்!

1982ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை, தமிழ் சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் உணர்வுப்பூர்வமான கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக இன்று...

More like this

கர சினிமா விமர்சனம்

இந்த கதையின் ஹீரோ இளைஞன் கரசாமி. அவனது அப்பா இறந்து போகிறார். அவரை தங்களது சொந்த நிலத்தில், தங்கள்...

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, பிரபல பாடகி சாருலதா மணி எழுதி இசையமைத்த ‘தென்றலில்’  சுயாதீன பாடல்!

https://www.youtube.com/watch?v=w1kKo7v-z6k இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து உருவான 'தக் லைஃப்' திரைப்படத்தில் இடம்பெற்று, மாபெரும் வரவேற்பைப் பெற்ற...