HomeCinemaமார்ச் 1-ல் ரீ ரிலீஸாகிறது ஜீவா, கார்த்திகா நடித்த 'கோ.'

மார்ச் 1-ல் ரீ ரிலீஸாகிறது ஜீவா, கார்த்திகா நடித்த ‘கோ.’

Published on

ஜீவா, கார்த்திகா, அஜ்மல் நடிப்பில், கே.வி. ஆனந்த் இயக்கிய ‘கோ படத்தை மீண்டும் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் பலரும் விருப்பம் தெரிவித்திருக்க, படத்தை வரும் மார்ச் 1, 2024 அன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக மறு வெளியீடு செய்வதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்திய ஜனநாயகம் உலகளவில் எப்போதும் உற்றுநோக்கக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது. மேலும் அந்த ஜனநாயகத்தை கட்டமைக்கும் தேர்தல்கள் மிகப்பெரிய நிகழ்வாகவும் இருக்கிறது. இந்த தேர்தல் அரசியல் ஜானரில் வெளியாகும் திரைப்படங்கள் அரிது. ஆனால், அப்படியான படங்கள் வெளியானால் மொழி மற்றும் பிராந்தியங்களுக்கு அப்பால் அவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரித்த ’கோ’ திரைப்படம் கடந்த 2011ல் வெளியாகி விமர்சன ரீதியாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது. அதன் கதைக்களத்திற்காக மட்டுமல்லாமல், அரசியல் அரங்கில் செல்வாக்கு செலுத்துவதிலும் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவருவதிலும் இளைஞர்களின் சக்தி எவ்வளவு முக்கியமானது என்பதை அந்தப் படம் கூறியிருந்தது. வரவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலை நாடே உற்று நோக்கியிருக்கும் சூழ்நிலையில் இந்த படம் வெளியாகிறது.

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட்  எல்ரெட் குமார் பேசும்போது, “நாங்கள் தயாரித்தப் படங்களில் ‘கோ’ எங்களுக்கு வெற்றிகரமான படைப்பு. இந்தத் திரைப்படத்தின் வெற்றி எங்களுக்கு விவரிக்க முடியாத மனநிறைவையும் தந்தது. பார்வையாளர்கள் அதை சினிமாவுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகக் கொண்டாடினர். இது வெளியாகி பத்து வருடங்களுக்கும் மேலாகிறது. ஆனால் மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்தின் மேஜிக், ஜீவா, அஜ்மல் ஆகியோரின் அபாரமான நடிப்பு மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் அற்புதமான இசையால் படம் இன்றும் சோர்வு ஏற்படுத்தாமல் ரசிக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது.

சரியான கதையை பொறுப்போடு பார்வையாளர்களுக்குக் கொண்டு சென்றதால்தான் இந்தப் படம் வெற்றிப் பெற்றது. இப்போது, இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்தி புரட்சியை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்ட தற்போதைய தலைமுறை இளைஞர்களுக்காக இந்தப் படத்தை மீண்டும் வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த் நம்மோடு இல்லாத இந்த சமயத்தில் இந்தப் படத்தை மீண்டும் வெளியிடுவது ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் படக்குழுவினர் என அனைவருக்கும் எமோஷனலான தருணம் இது.

படத்தை தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா முழுவதும் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படத்தை மீண்டும் வெளியிடவுள்ளோம்” என்றார்.

Latest articles

இன்ஸ்டன்ட் வைரல்: சாய் அபயங்கரின் அடுத்த 6-வது இண்டி பாடல் ‘ரதிமா’ வெளியானது!

https://www.youtube.com/watch?v=jR3rWCBeO6M பிரபல இளம் இசையமைப்பாளரும் பாடகருமான சாய் அபயங்கர், தனது 6-வது சுயாதீன (Indie) பாடலான ‘ரதிமா’ (Radhimaa)-வை திங்க்...

இயக்குநர் சுசி கணேசனின் பிறந்தநாளில் நிறைவு பெற்ற ‘ஒரண்ட’ படப்பிடிப்பு… பிரியாணியோடு விருந்தோடு உற்சாகம்!

தனது அடுத்த படைப்பின் பெயர் 'ஒரண்ட' என்று சமீபத்தில் அறிவித்த இயக்குநர் சுசி கணேசன், அவர் பிறந்த நாளான...

சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ படத்தின் முன்வெளியீட்டு விழா!

KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் தயாரிப்பில்,  ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், தேசிய விருது...

ஜென்-ஸி தலைமுறை உலகை பிரதிபலிக்கும் விதமாக சீயோன் ராஜா இயக்கும் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது! 

இன்றைய ஜென்-ஸி தலைமுறையின் fun, friendship, love மற்றும் family vibe-ஐ மையமாகக் கொண்டு உருவாகும் புதிய தமிழ்...

More like this

இன்ஸ்டன்ட் வைரல்: சாய் அபயங்கரின் அடுத்த 6-வது இண்டி பாடல் ‘ரதிமா’ வெளியானது!

https://www.youtube.com/watch?v=jR3rWCBeO6M பிரபல இளம் இசையமைப்பாளரும் பாடகருமான சாய் அபயங்கர், தனது 6-வது சுயாதீன (Indie) பாடலான ‘ரதிமா’ (Radhimaa)-வை திங்க்...

இயக்குநர் சுசி கணேசனின் பிறந்தநாளில் நிறைவு பெற்ற ‘ஒரண்ட’ படப்பிடிப்பு… பிரியாணியோடு விருந்தோடு உற்சாகம்!

தனது அடுத்த படைப்பின் பெயர் 'ஒரண்ட' என்று சமீபத்தில் அறிவித்த இயக்குநர் சுசி கணேசன், அவர் பிறந்த நாளான...

சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ படத்தின் முன்வெளியீட்டு விழா!

KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் தயாரிப்பில்,  ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், தேசிய விருது...