Monday, March 24, 2025
spot_img
HomeGeneralகலைஞர் தொலைக்காட்சியின் ‘ரஞ்சிதமே' தொடரில் ரஞ்சிதாவின் தாலியால் அருண் வீட்டில் வெடிக்கும் பூகம்பம்!

கலைஞர் தொலைக்காட்சியின் ‘ரஞ்சிதமே’ தொடரில் ரஞ்சிதாவின் தாலியால் அருண் வீட்டில் வெடிக்கும் பூகம்பம்!

Published on

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘ரஞ்சிதமே’ மெகா தொடருக்கு குடும்பங்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தொடரில், நாயகி ரஞ்சிதாவாக மனிஷாஜித்தும், மாமியாராக ரூபாஸ்ரீயும், நாயகனாக சதீஷூம், முக்கிய கதாபாத்திரங்களில் ஹரிநந்தன், ராம்ஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

தொடரில் தற்போது, ரஞ்சிதாவின் தாலி வெளியே தெரிந்து அருண் வீட்டில் பூகம்பம் வெடிக்க, ரஞ்சிதாவுக்கு தாலி கட்டியது யார் என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, அருண் பெயரை மறைத்து மற்ற அனைத்து உண்மைகளையும் அருண் வீட்டில் சொல்கிறாள் ரஞ்சிதா. இதனால் வேதவல்லிக்கு ரஞ்சிதா மீதான அன்பு குறைய, சுதாவும் ரஞ்சிதாவை கேள்வி கேட்டு விளாச தாலி கட்டியது அருண் என்கிற உண்மையை ரஞ்சிதா சொல்கிறாள்.

இதற்கிடையே வித்யாவின் மாமியார் அருண் – ரஞ்சிதா ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை காட்டி திருமணத்தை நிறுத்த மேலும் சிக்கல் உருவாக, இந்த சிக்கலை தான் சரிசெய்வதாக செல்லும் அருண், வித்யாவின் மாமியாரை கொலை செய்துவிட்டதாக அருணை போலீஸ் கைது செய்ய என தொடர் பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்கிறது.

Latest articles

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...

அரசியல் தலையீடுகளால் மாணவ சமூகம் எப்படியெல்லாம் பாழாகிறது என்பதை இந்த படம் எடுத்துக் காட்டியுள்ளது! -‘அறம் செய்’ படம் பார்த்து பாராட்டிய தொல் திருமாவளவன்

  அறம் செய் என்ற திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துகொண்டு படத்தை பார்த்த தொல்.திருமாவளவன் தன் கருத்துகளை பகிர்ந்துகொண்டபோது... இயக்குநர் எஸ்...

More like this

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...