HomeCinemaஏபிசி டாக்கீஸின் பிராந்திய விளம்பரத் தூதுவராக நடிகை சாக்ஷி அகர்வால் நியமனம்!

ஏபிசி டாக்கீஸின் பிராந்திய விளம்பரத் தூதுவராக நடிகை சாக்ஷி அகர்வால் நியமனம்!

Published on

சுயாதீன திரைப்பட இயக்குனர்களுக்கு ஆதரவளிக்கும் வெளிப்படையாக அணுகக் கூடிய ஓடிடி திரைப்பட ஸ்ட்ரீமிங் தளமான ஏபிசி டாக்கீஸ், முன்னணி நடிகையும் மாடலுமான சாக்ஷி அகர்வாலை தனது ஆலோசனைக் குழுவில் இணைத்துக் கொண்டதாக மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. இதற்கு மேலாக, சாக்ஷி அகர்வால் பிராந்திய விளம்பரத் தூதராகவும் செயல்படுவார், இளம் திறமைகளை ஆதரிக்க ஏபிசி டாக்கீஸ் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல் படுவதை மேலும் வலுப்படுத்துவார்.

தென்னிந்திய திரைப்படத்துறையில் பிரபலமான நடிகையும் மாடலுமான சாக்ஷி அகர்வால், பல்வேறு திறமைகளைக் கொண்டவர். அவர் ஆலோசனைக் குழுவில் இணைந்தது, சினிமாவில் படைப்பாற்றல் மற்றும் புதுமையை ஊக்குவிக்க ஏபிசி டாக்கீஸ் முன்னணி தொழில்முனைவோர்களுடன் இணைந்து செயல்படும் எண்ணத்தை பிரதிபலிக்கிறது.

இரட்டை பதவியில், சாக்ஷி அகர்வால் ஏபிசி டாக்கீஸ் நிறுவனத்திற்குத் தூரநோக்கு வழிகாட்டியாக இருந்து அதன் திட்டங்கள் மற்றும் முயற்சிகளை வடிவமைக்க உதவுவார். கேளிக்கை துறையில் அவரது பரந்த அனுபவமும், வளர்ந்து வரும் இளம் திறமைகளை ஆதரிக்கும் அவரது ஆர்வமும், ஏபிசி டாக்கீஸ் குழுவிற்கு ஒரு மறக்க முடியாத பலமாக இருக்கும். பிராந்திய விளம்பரத் தூதராகவும், அவர் பிராந்திய சந்தைகளில் தளத்தை ஊக்குவிக்க முக்கிய பங்காற்றுவார், மேலும் புதிய திரைப்பட இயக்குனர்களை தங்களுடைய படைப்புகளை ஏபிசி டாக்கீஸில் காட்சியிட ஊக்குவிப்பார்.

“சாக்ஷி அகர்வாலை எங்களின் ஆலோசனைக் குழுவில் இணைத்ததிலும், பிராந்திய விளம்பரத் தூதராகவும் நியமித்ததிலும் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,” என ஏபிசி டாக்கீஸின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஷாலிபத்ரா ஷா கூறினார். “திரைப்படத் துறையின் ஆழமான புரிதலும், புதிய திறமைகளுக்கு வழிகாட்டும் அவருடைய அர்ப்பணிப்பும், எங்கள் முக்கிய இலக்குகளுடன் இணைந்துள்ளன. அவருடைய பங்களிப்பு சுயாதீன திரைப்பட இயக்குனர்களை ஆதரிப்பதில் எங்களின் முயற்சிகளை மிகவும் மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்”.

சாக்ஷி அகர்வால் தன்னுடைய புதிய பொறுப்பைப் பற்றிய தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி பேசும்பொழுது, “இளம் திரைப்பட இயக்குனர்களின் வாழ்க்கையை மாற்றும் ஒரு தளமாக செயல்படும் ஏபிசி டாக்கீஸின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். கதைக்களத்தின் சக்தியில் நம்பிக்கையுள்ளவளாகவும் புதிய திறமைகளுக்கு வாய்ப்பு வழங்குவதின் அவசியத்தை உணர்வதாகவும் நான் நம்புகிறேன். ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், பிராந்திய விளம்பரத் தூதராகவும் ஏபிசி டாக்கீஸின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் நான் பங்களிக்க விரும்புகிறேன்” என்றார்.

சுயாதீன திரைப்பட இயக்குனர்களுக்கு வெற்றி பெற தேவையான வளங்களையும் வாய்ப்புகளையும் வழங்க ஏபிசி டாக்கீஸ் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. அவரது நியமனம், கேளிக்கைத் துறைத்தளம் தனது தாக்கத்தையும் வளர்ச்சியையும் மேலும் வலுப்படுத்துவதற்கான திட்டத்தின் நம்பிக்கையை வலியுறுத்துகிறது.

Latest articles

நடிகர் சஞ்சீவ் முன்னிலையில் நடந்த சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்களின் கைவண்ணத்தில் முதலமைச்சர் விஜய்யை கௌரவிக்கும் பிரமாண்ட நிகழ்ச்சி! 

சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்களின் கைவண்ணத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய்...

தமிழ்நாடு மேடை நடனக் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் ஏற்பாட்டில் நடிகை தமிழ்ச் செல்வி திருவுருவ படத்திறப்பு நிகழ்வும் 1000 பேருக்கு அன்னதானமும்! சென்னை வடபழனியில் நாளை நடைபெறுகிறது.

பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, காலம் மாறிப்போச்சு உள்ளிட்ட படங்களில் நடித்த தமிழ்ச்செல்வி கடந்த மாதம் காலமானார். அவரது கணவரும், தமிழ்நாடு...

பெத்தி மூலம் ராம் சரணுக்கு தேசிய விருது! -நடிகர் சிவராஜ்குமார் நம்பிக்கை

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள “பெத்தி” திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது...

உற்சாகமாக நடந்த இசையமைப்பாளர் கங்கை அமரன் எழுத்தில் உருவான ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழா!

https://www.youtube.com/watch?v=QTUU3zsSD5g டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில் கிளாடி ஜெராடு தயாரிப்பில் 'உறவுகள்' என்ற தலைப்பில் 'உயிரிணையே' இசை ஆல்பம் வெளியீட்டு...

More like this

நடிகர் சஞ்சீவ் முன்னிலையில் நடந்த சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்களின் கைவண்ணத்தில் முதலமைச்சர் விஜய்யை கௌரவிக்கும் பிரமாண்ட நிகழ்ச்சி! 

சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்களின் கைவண்ணத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய்...

தமிழ்நாடு மேடை நடனக் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் ஏற்பாட்டில் நடிகை தமிழ்ச் செல்வி திருவுருவ படத்திறப்பு நிகழ்வும் 1000 பேருக்கு அன்னதானமும்! சென்னை வடபழனியில் நாளை நடைபெறுகிறது.

பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, காலம் மாறிப்போச்சு உள்ளிட்ட படங்களில் நடித்த தமிழ்ச்செல்வி கடந்த மாதம் காலமானார். அவரது கணவரும், தமிழ்நாடு...

பெத்தி மூலம் ராம் சரணுக்கு தேசிய விருது! -நடிகர் சிவராஜ்குமார் நம்பிக்கை

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள “பெத்தி” திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது...