சுதீஷ் சுப்ரமணியம் இயக்கத்தில், கதையின் பிரதான பாத்திரங்களில் பாலு, ஆதிரா, சுருதி, தமிழ்ச்செல்வி, பிரேமா, சந்தோஷ், அபி, திவாகர் ஆகியோர் நடித்துள்ள படம் ‘ராமுவின் மனைவிகள்.’
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”ராமுவும் மல்லியும் முறைப்படி செய்து கொள்கின்றனர். புகுந்த வீட்டிற்கு வந்த மல்லி மேலும் அங்கு இருக்கும் சில பெண்களை கண்டு திகைக்கிறாள். அவர்கள் அனைவருக்குள்ளும் ஏதோ ரகசியம் இருப்பதை உணர்கிறாள். என்னவென்று தெரிந்து கொள்ள முயற்சிக்கும் போது அங்கிருக்கும் மலர், நாங்கள் அனைவரும் ராமுவின் மனைவிகள்தான் என்று கூற, இதைக்கேட்ட மல்லி மேலும் அதிர்ச்சி அடைகிறாள். பின்னர் மல்லியும், மலரும் மனம் விட்டு நெருங்கி பழகுகிறார்கள்.
ராமுவின் கொடுமையிலிருந்து வெளியேற இருவரும் முடிவு செய்து வீட்டை விட்டு தப்பிக்க முயற்சிக்கிறார்கள். அவர்களது முயற்சி வெற்றியடைந்ததா? இல்லையா ? என்பதே படத்தின் கதைக்களம்” என்றார்.
படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகளும் மூன்று பாடல்களும் இடம்பெற்றுள்ளன. படப்பிடிப்பு 30 நாட்களில் பொள்ளாச்சி, மதுரை, தேனி, கேரளாவில் உள்ள பட்டாம்பி ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது. அதையடுத்து பட வெளியீட்டுக்கு முந்தைய போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

