பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்தபாபுவின் மூத்த மகனுமான பிஜேஷ் நாகேஷ், சந்தானம் நடித்த ‘சர்வர் சுந்தரம்’, பிரபுதேவா நடித்த ‘பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அவர் இப்போது ‘வானரன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
பரபரப்பாக பேசப்பட்ட ‘டூ’ படத்தை இயக்கிய ஸ்ரீராம் பத்மநாபன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
அவரிடம் பேசியபோது, ”பகல் வேஷம் என்னும் கலையை பின் தொடரும் ஆஞ்சநேயர் வேடம் அணிபவர்களின் வாழ்வியலையும் தந்தை மகள் உறவை சொல்லும் விதமாகவும் இந்த படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது” என்றார்.
பிஜேஷ் நாகேஷ் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் யதார்த்தமாக நடித்திருப்பதால் தமிழ் சினிமா அவர் அடுத்த கட்டத்திற்கு செல்வார் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கதாநாயகி அக்ஷயா ஒயிலாட்டக் கலைஞராக மிக இயல்பாக நடித்திருக்க, குணச்சித்திர வேடத்தில் ஆதேஷ் பாலாவும், குழந்தை நட்சத்திரமாக பேபி வர்ஷாவும் நடிப்பில் முத்திரை பதித்துள்ளார்களாம்.
லொள்ளு சபா ஜீவா, தீபா சங்கர், நாஞ்சில் விஜயன், எஸ்.எல்.பாலாஜி, வெங்கட்ராஜ் , சிவகுரு, ராம்ராஜ், வெடிக்கண்ணன், மேடை கலைஞர்களான நாமக்கல் விஜயகாந்த், ஜூனியர் டி.ஆர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள இடங்களில் 30 நாட்களில் நடந்து முடிந்துள்ளது. அதையடுத்து பட வெளியீட்டுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரியளவில் ரசிகர்களிடம் பரபரப்பை உருவாக்கி வரவேற்பு பெற்று வருகிறது.
படக்குழு:
தயாரிப்பு: ஆரஞ்ச் பிக்சர்ஸ்’ ராஜேஷ் பத்மநாபன், சுஜாதா ராஜேஷ்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: ஸ்ரீராம் பத்மநாபன்
ஒளிப்பதிவு: நிரன் சந்தர்
இசை: ஷாஜகான்
பாடல்கள்: செந்தமிழ்
படத்தொகுப்பு: வித்து ஜீவா
மக்கள் தொடர்பு: வெங்கட்