வைபவ் நடிக்கும் பெயரிடப்படாத 27-வது திரைப்படம் சென்னை தரமணி எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
நடிகர் வைபவுடன் செல்முருகனும் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று நடிகர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, வைபவ்வின் படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்றுகளை படக்குழுவினர் நட்டுள்ளனர். மட்டுமல்லாது அங்கு பணியாற்றும் படக்குழுவினர் மற்றும் திரைப்படக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு என மொத்தம் 100 மரக்கன்றுகளை படக்குழு வழங்கியுள்ளது.