HomeCinemaஇந்த படத்தில் யாரும் கஷ்டப்பட்டு வேலை செய்யவில்லை; இஷ்டப்பட்டு வேலை செய்தோம்! -‘வட்டார வழக்கு' பட...

இந்த படத்தில் யாரும் கஷ்டப்பட்டு வேலை செய்யவில்லை; இஷ்டப்பட்டு வேலை செய்தோம்! -‘வட்டார வழக்கு’ பட நிகழ்வில் நடிகர் சந்தோஷ் நம்பிராஜன் பேச்சு

Published on

‘டூலெட்’ படத்தில் நடித்து கவனம் ஈர்த்த சந்தோஷ் நம்பிராஜன், கதையம்சமுள்ள படங்களில் நடித்துவரும் ரவீனா ரவி நடிப்பில், கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கிய படம் ‘வட்டார வழக்கு.’ இந்த படம் வரும் டிசம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

நிகழ்வில் இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் பேசியபோது, ‘‘பின்னணி இசையை நம்பி இருக்கக்கூடிய படம் இது. இந்தக் கதைக்கு இளையராஜா சார் இசை இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அவர் படம் பார்த்து சம்மதித்து 12 நாட்கள் ஒரு தியானம் போல, பின்னணி இசையை செய்து கொடுத்தார். அதேபோல் நல்ல படம் என்பதால் படத்தில் நடித்தவர்கள், ஒளிப்பதிவாளர் என பலரும் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆதரவு கொடுத்தனர். பொருளாதாரத்தில் சில குறை நிறைகளோடு இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். அதை மன்னித்து உங்கள் ஆதரவைக் கொடுங்கள்’ என்றார்.

நடிகர் சந்தோஷ் நம்பிராஜன், ‘‘இந்தப் படத்தில் யாரும் கஷ்டப்பட்டு வேலை செய்யவில்லை இஷ்டப்பட்டு தான் வேலை செய்து இருக்கிறோம். இசைஞானி இசையில் நடித்துள்ளது எனக்குப் பெருமையாக உள்ளது. இப்போதெல்லாம் சின்ன படங்களை வெளியிடுவது கஷ்டம், தியேட்டர் கிடைப்பதில்லை என்று சொல்கிறார்கள். அது முற்றிலும் பொய். நீங்கள் ஒரு தரமான படத்தை எடுத்தால் அதை வெளியிடுவதற்கு சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேல் சார் தயாராக இருக்கிறார். நீங்கள் உழைப்பையும், படத்தையும் நேர்மையாக கொடுத்தால் உங்களுக்கான அங்கீகாரமும் அடையாளமும் விருதுகளும் தானாக வந்து சேரும் என்பது நிச்சயம். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்” என்றார்.

நடிகை ரவீனா ரவி, ‘‘நல்ல கதையம்சம் கொண்ட படம் இது. எல்லோரும் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறோம். திரையரங்கில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

படத்தை வெளியிடுகிற சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் ‘‘கமர்ஷியல் படங்கள் என்பதை விட உண்மைக்கு நெருக்கமான படங்களை விநியோகிப்பதில்தான் எனக்கு ஆத்மார்த்த திருப்தி. இந்த படமும் அப்படியான படம். மக்கள் ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

 

Latest articles

இந்த படத்தில் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளேன்; நல்ல படத்தை உருவாக்கியிருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது! -சென்னையில் நடந்த எங்கள் தங்கம் பட விழாவில் நடிகை சமந்தா பேச்சு

சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'எங்கள் தங்கம்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகை சமந்தா...

மக்கள் தலைவா சினிமா விமர்சனம்

தமிழகத்தின் தேர்தல் அரசியல் எந்தளவுக்கு சீர் கெட்டுப் போயிருக்ககிறது என்பதையும், ஓட்டு போடும் மக்களிடமிருக்கும் முட்டாள்தனத்தையும் பொலிடிக்கல் சட்டயர்...

ஜூலை 17ல் வெளியாகிறது ‘அன்பே டயானா.’ அசத்தலான போஸ்டரில் அறிவித்த படக்குழு.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் மற்றும் இரா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம்,...

இந்தியாவில் ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) படத்திற்கான முன்பதிவு தொடக்கம்… ரசிகர்கள் பிரீமியம் பெரிய திரை வடிவங்களில் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு!

'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது! டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், ஜூலை 30...

More like this

இந்த படத்தில் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளேன்; நல்ல படத்தை உருவாக்கியிருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது! -சென்னையில் நடந்த எங்கள் தங்கம் பட விழாவில் நடிகை சமந்தா பேச்சு

சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'எங்கள் தங்கம்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகை சமந்தா...

மக்கள் தலைவா சினிமா விமர்சனம்

தமிழகத்தின் தேர்தல் அரசியல் எந்தளவுக்கு சீர் கெட்டுப் போயிருக்ககிறது என்பதையும், ஓட்டு போடும் மக்களிடமிருக்கும் முட்டாள்தனத்தையும் பொலிடிக்கல் சட்டயர்...

ஜூலை 17ல் வெளியாகிறது ‘அன்பே டயானா.’ அசத்தலான போஸ்டரில் அறிவித்த படக்குழு.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் மற்றும் இரா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம்,...