HomeCinemaநடிகர் விஜய் விஷ்வாவுக்கு, கம்போடியா உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டில் ஒளிரும் நட்சத்திரம் விருது வழங்கி...

நடிகர் விஜய் விஷ்வாவுக்கு, கம்போடியா உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டில் ஒளிரும் நட்சத்திரம் விருது வழங்கி பாராட்டு!

Published on

கம்போடியா நாட்டின் சியம் ரீப் நகரில் இரண்டாம் உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாடு நவம்பர் 21 முதல் 26 வரை நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழறிஞர்கள், புலவர்கள், கவிஞர்கள் கலந்து கொண்டார்கள்.

ஜெர்மன் ஹம் நகரில் உள்ள காமாட்சி அம்மன் தலைமை ஆதீனம் சிவ ஸ்ரீ பாஸ்கர குருக்கள்,ஆஸ்திரேலிய எழுச்சிக் கவிஞரும் சிறை அதிகாரியுமான ரவிச்சந்திரன்,ஆசிரியையும் வானொலி ஒலிபரப்பாளருமான சாரதா ரவிச்சந்திரன்,சமூக செயற்பாட்டாளர் நாவலூர் முத்து, தொல் ஆய்வாளர் சுகவனம், புலவர் நந்திவர்மன், டாக்டர் வாசுகி சித்திரசேனன், அகிலன் ஆகியோருடன் தமிழ் நடிகர் விஜய் விஷ்வா கலந்து கொண்டார்.

விழாவில் உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டுப் பாடல் வெளியிடப்பட்டது. பாடலை பாடியவர் வேல்முருகன். கேவி மீடியாஸ் சார்பில் டாக்டர் பி.செந்தில் நாதன் தயாரித்திருந்தார். ஞானம், சீனு ஒருங்கிணைத்துள்ளனர். ஜி கே வி இசையமைத்துள்ளார். கவிஞர் தாமரை பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

தனது கம்போடியப் பயண அனுபவம் பற்றி நடிகர் விஜய் விஷ்வாவிடம் கேட்டபோது, நான் கம்போடியா சென்று அங்குள்ள மண்ணையும் மக்களையும் பார்க்கும்போது எனக்கு நமது தமிழ் கலாச்சாரத்தின் மீது பிரமிப்பு ஏற்பட்டது. கடல் கடந்து நம் தமிழர்கள் சென்று பரப்பிய பண்பாட்டை அங்கே பார்க்க முடிந்தது.

ஒரு சுற்றுலாவாக அங்கோர்வாட் சென்று அங்குள்ள கோயில்களைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. நமது தமிழ் மன்னர்கள் அமைத்த கோயிலைக் கண்டு ஒரு புறம் பெருமையாகவும் அதன் சிதைவுகளைக் கண்டும் அதன் மீது வேறொரு பண்பாட்டுச் சின்னங்களை நிறுவ முயன்று இருப்பதைப் பார்க்கும்போது வேதனையாகவும் இருந்தது.

கம்போடிய மக்கள் மிகுந்த மரியாதை தருபவர்கள். பொறுமையானவர்கள். அவர்கள் நம்மிடம் பழகும் போது அவர்களது பண்பாட்டை அறிய முடிந்தது.

கம்போடியாவிலுள்ள தமிழ்ச் சான்றோர்கள் கம்போடிய அரசின் தலைமை அலுவலகத்தில் தமிழ் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் திருவள்ளுவர் சிலையை நிறுவி உள்ளனர். கம்போடியப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கவிஞர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்தியதில் கம்போடியாவில் இருக்கும் தமிழ் ஆர்வலர்கள் ஞான சேகரன், சீனிவாச ராவ், தாமரை சீனிவாசராவ் ஆகியோர் ஆற்றிய பணி அறிந்து பெருமையாக இருந்தது. அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் வாழ்த்தினாலும் தகும்.

கம்போடிய மண்ணையும் மக்களையும் பார்க்கும்போது நமது மக்களைப் பார்ப்பது போன்ற உணர்வு வருகிறது.

கவிஞர்கள் மாநாட்டில் மொழி தெரியாவிட்டாலும் கூட நமது மொழியை மதித்து பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியாகவும் பொறுப்பாகவும் அமர்ந்திருந்து கண்டு களித்தது மகிழ்ச்சியாக இருந்தது .அது நமது மொழிக்கும் பண்பாட்டுக்கும் தரக்கூடிய மரியாதையாகவும் இருந்தது. எனக்கு ஒளிரும் நட்சத்திரம் விருது வழங்க கௌரவித்தார்கள்” என்றார்.

குறிப்பு:- கம்போடியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் 2000 ஆண்டுகாலப் பாரம்பரியத் தொடர்பு உண்டு.வாணிபத் தொடர்பு வழியாகச் சென்று கலந்த தமிழர்களின் நாகரிகம் பண்பாடு போன்றவற்றின் தாக்கம் கம்போடியாவில் இன்றும் உண்டு.
அங்கும் தமிழர்கள் வசிக்கிறார்கள்; தமிழ்க் கலைகளைக் கொண்டாடுகிறார்கள். அதன் ஓர் அம்சமாக கம்போடியாவில் இரண்டாம் உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாடு நடைபெற்றது.

Latest articles

200 கோடி கிளப்பில் மீண்டும் இணைந்த சூர்யா – வசூலில் புதிய சாதனை படைத்த விஸ்வநாத் & சன்ஸ்.

சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக்...

ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை! 

ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை சென்னையில் படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்களின்...

90ஸ் கிட்ஸ் பரிதாபங்களையும் நடுத்தரக் குடும்ப வாழ்வியலையும் சுவாரஸ்யமாக பிரதிபலிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகிறது!

'மிடில் கிளாஸ் மாப்பிள்ளை' என்ற பெயரில் பிரபு ஏகாம்பரம் இயக்கியுள்ள திரைப்படத்தில் கதையின் நாயகனாக பிரபு ஏகாம்பரம், நாயகியாக...

அர்ஜுன் தாஸை இந்த படத்தில் லவர் பாயாக அனைவரும் ரசிப்பீர்கள்! -ஒன்ஸ் மோர் பட விழாவில் அதிதி ஷங்கர்

அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடித்துள்ள ஒன்ஸ் மோர் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நிகழ்வில் நடிகர்...

More like this

200 கோடி கிளப்பில் மீண்டும் இணைந்த சூர்யா – வசூலில் புதிய சாதனை படைத்த விஸ்வநாத் & சன்ஸ்.

சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக்...

ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை! 

ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை சென்னையில் படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்களின்...

90ஸ் கிட்ஸ் பரிதாபங்களையும் நடுத்தரக் குடும்ப வாழ்வியலையும் சுவாரஸ்யமாக பிரதிபலிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகிறது!

'மிடில் கிளாஸ் மாப்பிள்ளை' என்ற பெயரில் பிரபு ஏகாம்பரம் இயக்கியுள்ள திரைப்படத்தில் கதையின் நாயகனாக பிரபு ஏகாம்பரம், நாயகியாக...