சந்தானம் நடிக்கும் புதிய படத்தை ‘கோபுரம் பிலிம்ஸ்’ அன்புச்செழியன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். இந்த படம் மூலம் பிரியாலயா என்பவர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் கூடவே முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
படத்தை ஆனந்த் நாராயண் இயக்கியுள்ளார்.
பல வெற்றிப் படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். டி. இமானின் இசையில் மூன்று பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன. பாடல் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர்.
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக், டிரெய்லர் வெளியீடு எப்போது என்பது தெரியவரும்.
‘படம் கதையம்சத்தோடு நகைச்சுவை கலந்த கமர்ஷியல் பிரமாண்ட படைப்பாக, அனைத்து இளைஞர்களும் ரசிக்கும்படி, சந்தானத்தின் ரசிகர்கள் கொண்டாடும்படி உருவாகியுள்ளது’ என்கிறது படக்குழு.
‘கோபுரம் பிலிம்ஸ்’ ‘வெள்ளைக்கார துரை’, ‘தங்கமகன்’ ‘மருது’, ‘ஆண்டவன் கட்டளை’, உள்ளிட்ட வெற்றிப் படங்களை தொடர்ந்து இந்த படத்தை தயாரிக்கிறது.
படக்குழு:-
ஒளிப்பதிவு – ஓம் நாராயண்
எடிட்டிங் – எம். தியாகராஜன்
கலை – எம். சக்தி வெங்கட்ராஜ்
ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல்
நடனம் – பிருந்தா, பாபா பாஸ்கர்