Tuesday, January 20, 2026
spot_img
HomeCinemaஇந்த படத்தில், காதலர்கள் சாதிப் பாகுபாட்டால் எப்படி சீரழிக்கப்படுகிறார்கள் என்பதை  சொல்லியிருக்கிறேன்! -‘செம்பியன் மாதேவி’ பட...

இந்த படத்தில், காதலர்கள் சாதிப் பாகுபாட்டால் எப்படி சீரழிக்கப்படுகிறார்கள் என்பதை  சொல்லியிருக்கிறேன்! -‘செம்பியன் மாதேவி’ பட நிகழ்வில் இயக்குநர், தயாரிப்பாளர் லோக பத்மநாபன் பேச்சு

Published on

சாதிய வன்கொடுமைகளும், ஆணவக் கொலைகளும் தற்போதும் நடந்துகொண்டு தான் இருக்கிறது என்பதை கதைக்களமாக கொண்டுள்ள ‘செம்பியன் மாதேவி’ ஆகஸ்ட் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக படம் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது.

திரையிடலுக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார் இயக்குநரும் தயாரிப்பாளருமான லோக பத்மநாபன். அப்போது பேசிய அவர், “செம்பியன் மாதேவி முழுக்க முழுக்க உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம். படத்தில் இடம்பெறும் சம்பவங்கள், தமிழகத்தில் மட்டும் அல்ல நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் தற்போதும் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. இப்படிப்பட்ட சம்பவங்கள் தற்போது நடக்கவில்லை, என்று யாரும் மறுக்க முடியாது” என்றார்.

படத்தை எத்தனை திரையரங்குகளில் வெளியிடுகிறீர்கள்? என்ற கேள்விக்கு “அது தான் இன்று வரை கேள்விக்குறியாக இருக்கிறது. இன்று வரை எங்களுக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. என் சொந்த ஊரில் நான்கு திரையரங்குகள் இருக்கின்றன, ஆனால் ஒன்றில் கூட எனக்கு ஒரு காட்சி கூட இதுவரை தரவில்லை. இவ்வளவு பணம் செலவு செய்து, சமூகத்திற்கான ஒரு படம் எடுத்திருக்கிறேன், ஆனால் எனக்கு இதுவரை திரையரங்குகள் ஒதுக்கப்படாதது கவலையாக இருக்கிறது. நான் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருக்கிறேன், அவர்களிடமும் முறையிட்டு தன இருக்கிறேன். இருந்தாலும் எனக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை, என்பது பெரும் வேதனையாக இருக்கிறது” என்றார்.

மேலும் சாதி பிரச்சனைக்கு காதல் தீர்வாகுமா? என்ற கேள்விக்கு, “இதில் நான் எந்த தீர்வும் சொல்லவில்லை, சாதி பாகுபாட்டால் காதலர்கள் எப்படி சீரழிக்கப்படுகிறார்கள், என்பதை தான் சொல்லியிருக்கிறேன். அதுமட்டும் அல்ல, இது என் கற்பனை கதை அல்ல, நான் கேள்விப்பட்ட, பார்த்த, நாம் பத்திரிகைகளில் படித்த சம்பவங்கள் தான் என்பதால், இதை யாராலும் மறுக்க முடியாது” என்றார்.

Latest articles

“விஸ்வராகம்” என்பது தென்னிந்திய இசை வரலாற்றில் காலத்தால் அழியாத மெல்லிசைகளால் பல தலைமுறைகளை ஆட்கொண்ட M. S. Viswanathan...

சாந்தனு பாக்யராஜின் ‘மெஜந்தா’ திரைப்பட டீசர் வெளியானது!

நடிகர் சாந்தனு பாக்யராஜ் தனது நடிப்பு திறனுக்கு தீனி போடும் வகையிலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். ஒவ்வொரு...

‘மரகத நாணயம் 2’ படத்தின் விஷுவல் கிளிம்ப்ஸ் வெளியானது!

வெற்றியடைந்தது மட்டுமல்லாது தமிழ் சினிமாவின் பொழுதுபோக்கு தரத்தை மறுவரையறை செய்தது கடந்த 2017-ம் ஆண்டு வெளியான கற்பனை நகைச்சுவை...

கவின் – பிரியங்கா மோகன் முதன்முறையாக இணையும் படத்தில் சாண்டி மாஸ்டர்!

கவின் – பிரியங்கா மோகன் ஜோடி கென் ராய்சன் இயக்கத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தில் சாண்டி மாஸ்டர் முக்கிய...

More like this

“விஸ்வராகம்” என்பது தென்னிந்திய இசை வரலாற்றில் காலத்தால் அழியாத மெல்லிசைகளால் பல தலைமுறைகளை ஆட்கொண்ட M. S. Viswanathan...

சாந்தனு பாக்யராஜின் ‘மெஜந்தா’ திரைப்பட டீசர் வெளியானது!

நடிகர் சாந்தனு பாக்யராஜ் தனது நடிப்பு திறனுக்கு தீனி போடும் வகையிலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். ஒவ்வொரு...

‘மரகத நாணயம் 2’ படத்தின் விஷுவல் கிளிம்ப்ஸ் வெளியானது!

வெற்றியடைந்தது மட்டுமல்லாது தமிழ் சினிமாவின் பொழுதுபோக்கு தரத்தை மறுவரையறை செய்தது கடந்த 2017-ம் ஆண்டு வெளியான கற்பனை நகைச்சுவை...
error: Content is protected !!