சென்னையையடுத்த கூடுவாஞ்சேரி எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளி, நொய்டா நகரில் நடைபெற்ற தேசியளவிலான ரோபோட்டிக் வடிவமைப்பு போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது. அதை தொடர்ந்து இந்தப் பள்ளி உலக அளவில் நடைபெறும் உலக ரோபோட்டிக் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கவுள்ளது.
எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதுடன் மாணவர்களை இளம் வயதியிலேயே ஆராய்ச்சிப் பணியில் ஆர்வத்தை ஏற்படுத்தி இளம் விஞ்ஞானிகளாக, கண்டுபிடிப்பாளர்களாக உருவாக்கும் வகையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.