Thursday, January 22, 2026
spot_img
HomeCinemaவரலட்சுமி சரத்குமாரின் பான் இந்திய திரைப்படம் ‘சபரி’ மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

வரலட்சுமி சரத்குமாரின் பான் இந்திய திரைப்படம் ‘சபரி’ மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

Published on

வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடிக்க, அறிமுக இயக்குநர் அனில் காட்ஸ் இயக்கத்தில் பான் இந்தியா படைப்பாக உருவாகியுள்ள படம் ‘சபரி.’

இந்த படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், ஷஷாங்க், மைம் கோபி, சுனயனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், ரஷிகா பாலி, விவா ராகவா, பிரபு, பத்ரம், கிருஷ்ணதேஜா, பிந்து பகிடிமரி, அஸ்ரிதா வேமுகந்தி, ஹர்ஷினி கொடுரு, அர்ச்சனா பாபி நீவே ஆனந்த், பிரமோத் ஆனந்த், சிறுமி கிருத்திகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

இந்த படம் வரும் மே மாதம் 3-ம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

படம் குறித்து தயாரிப்பாளர் மகேந்திரநாத் கோண்ட்லா பேசியபோது, ”இந்த படம் புதுமையான கதை மற்றும் திரைக்கதையுடன் உருவாகியிருக்கிறது. வலுவான கதைக்களத்தோடு உணர்வுப்பூர்வமான மற்றும் விறுவிறுப்பான திரில்லர் காட்சிகள் ரசிகர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் இதுவரை நடித்திராத மாறுபட்ட வேடத்தில் நடித்திருப்பதோடு, தனது நடிப்பு மூலம் ரசிகர்களை நிச்சயம் வியப்பில் ஆழ்த்துவார். தெலுங்கு மற்றும் தமிழ் பதிப்புகளின் இறுதிப் பிரதிகளைப் பார்த்தவர்கள் படம் மிக சிறப்பாக வந்திருப்பதாக கூறியது, எங்களுக்கு மகிழ்ச்சியளித்திருக்கிறது. பிற மொழி டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ‘வேர்ல்ட் ஆஃப் சபரி’ முன்னோட்ட வீடியோவுக்கு கிடைத்த வரவேற்பு எங்கள் படக்குழுவினருக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது” என்றார்.

படக்குழு:
தயாரிப்பு – மஹா மூவிஸ் மகேந்திரநாத் கோண்ட்லா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அனில் காட்ஸ்
இணை இயக்குநர் – வம்சி
இணை எழுத்தாளர் – சன்னி நாகபாபு
ஒளிப்பதிவு – ராகுல் ஸ்ரீவத்சவா, நானி சமிடி ஷெட்டி
இசை : கோபி சுந்தர்
பாடல்கள் – ரஹ்மான், மிட்டபள்ளி சுரேந்தர்
படத்தொகுப்பு – தர்மேந்திர ககரலா
கலை இயக்குநர் – ஆஷிஷ் தேஜா பூலாலா
நடன இயக்குநர்கள் – சுசித்ரா சந்திர போஸ், ராஜ் கிருஷ்ணா
ஸ்டண்ட் இயக்குநர் – நந்து-நூர்
ஒப்பனை – சித்தூர் ஸ்ரீனு
ஆடைகள் – ஐயப்பா
ஆடை வடிவமைப்பாளர் – மானசா
புகைப்படக்கலைஞர் – ஈஸ்வர்
தயாரிப்பு நிர்வாகி – லட்சுமிபதி காந்திபுடி
நிர்வாக தயாரிப்பாளர் – சீதாராமராஜு மல்லேலா
மக்கள் தொடர்பு: புலகம் சின்னராயனா,
தமிழில் மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா

Latest articles

பாரத்- சான்வி மேக்னா நடிப்பில் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த...

‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன்,...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு...

தீவிரமான படைப்பாக ‘தடயம்.’ மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தில் சமுத்திரகனி!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி...

More like this

பாரத்- சான்வி மேக்னா நடிப்பில் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த...

‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன்,...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு...
error: Content is protected !!