Monday, March 24, 2025
spot_img
HomeMovie Review‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' சினிமா விமர்சனம்

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ சினிமா விமர்சனம்

Published on

பேய்ப்படங்கள் என்றாலே அதன் கதை மக்கள் நடமாட்டமே இல்லாத பகுதியிலுள்ள பங்களாவுக்குள் சிலர் சிக்கிகொள்ள, அவர்களைக் கொல்ல அங்கிருக்கும் பேய் அல்லது பேய்கள் சுற்றி வளைக்க, சிக்கிக் கொண்டவர்கள் அந்த பேய்களிடமிருந்து தப்பிக்க போராடுவதாக அமைவதே வழக்கம். அதிலிருந்து மாறுபட்டு சில படங்கள் வருவதுண்டு. அந்த வரிசையில் தமிழ் சினிமாவுக்கு 2023-ம் வருட கடைசி வாரத்தின் புதுவரவு ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.’

பலான படம் ஓடும் அந்த தியேட்டரில் சில இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் ஒன்றிரண்டு பேர், இரண்டு இளம்பெண்கள், ஒரு நடுத்தர வயது நபர், ஒரு கள்ளக் காதல் ஜோடி என 13 பேர் சில பேய்களின் பிடியில் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்கிற அளவுக்கு சிக்குகிறார்கள்.

பேய்களாக வருபவர்கள் ‘நாங்கள் உயிருடன் இருந்தபோது, எங்களை சுயநலத்துக்காக கொன்ற ஆசாமியை கொண்டு வந்து ஒப்படைத்தால் உங்களை உயிருடன் விடுகிறோம்’ என்று சொல்ல கதையில் பரபரப்பு கூடுகிறது.

கொலைகாரனை அந்த 13 பேரால் கொண்டுவர முடிந்ததா? பேயாக திரிகிறவர்கள் கொலை செய்யப்பட்டதன் பின்னணி என்ன? என்பதையெல்லாம் விவரிக்கிறது திரைக்கதை. இயக்கம் ரமேஷ் வெங்கட்

பரிதாபங்கள் கோபி, சுதாகரோடு சந்தோஷ், அகஸ்டின், ஜெயசீலன், விஜய், சாரா, அப்துல் என யூ டியூப் பிரபலங்கள், தப்புத்தண்டா’ படத்தில் நடித்த சத்யமூர்த்தி என சிலரது நடிப்பு பங்களிப்பு படம் முழுக்க தொடர்கிறது. கூடவே யாஷிகா ஆனந்த், ஹர்ஜியா, கிரேன் மனோகரும் வருகிறார்கள். விஜே ஆஷிக்கும் இணைந்திருக்கிறார். எல்லோருமாக சேர்ந்து கலகலப்பூட்டுகிறார்கள். பேய்களிடம் மாட்டிக் கொண்டு அவதியும் படுகிறார்கள். அத்தனை பேரின் நடிப்புப் பங்களிப்பும் நிறைவு.

ரித்விகா, பீச்சாங்கை’ கார்த்திக், ரித்விகா காதல் ஜோடிகளாக இருந்து மணவாழ்வில் இணைந்து பரிதாப முடிவை சந்திப்பது கலங்க வைக்கிறது.

முனீஷ்காந்த் அலட்டலான வில்லத்தனம் காட்ட அவரது மனைவியாக வருகிற ஜாங்கிரி மதுமிதா கிளைமாக்ஸில் கவனிக்க வைக்கிறார்.

தியேட்டருக்குள் வந்து 25 வருடங்களாக வெளியில் போக முடியாத ஜார்ஜ் மரியானின் நடிப்பு கச்சிதம்.

கெளசிக் கிரிஸின் பின்னணி இசை திகில் கதைக்களத்தின் தேவையை முடிந்தவரை நிறைவேற்ற, ஒளிப்பதிவில் நிறைவான பங்களிப்பை தந்திருக்கிறார் ஜோஸ்வா ஜே.பெரஷ்.

கதையில் பெரிதாய் புதுமை இல்லாவிட்டாலும் கதை நிகழ்விடமும் எளிமையான பட்ஜெட்டில் எளிமையான நேர்த்தியான உருவாக்கமும், காமெடி கலாட்டாக்களும் படத்தின் பலம்.

Latest articles

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...

அரசியல் தலையீடுகளால் மாணவ சமூகம் எப்படியெல்லாம் பாழாகிறது என்பதை இந்த படம் எடுத்துக் காட்டியுள்ளது! -‘அறம் செய்’ படம் பார்த்து பாராட்டிய தொல் திருமாவளவன்

  அறம் செய் என்ற திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துகொண்டு படத்தை பார்த்த தொல்.திருமாவளவன் தன் கருத்துகளை பகிர்ந்துகொண்டபோது... இயக்குநர் எஸ்...

More like this

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...