பிருத்விராஜ் சுகுமாரன், பார்வதி திருவோத்து, ஹக்கிம் ஷாஜஹான் ஆகியோர் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள #NOBODY திரைப்படம், எர்ணாகுளத்திலுள்ள அழகிய வெலிங்டன் தீவில் பூஜையுடன் இனிதே துவங்கியது.
பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்தின் கதையை சமீர் அப்துல் எழுதியுள்ளார். புகழ்பெற்ற முன்னணி படைப்பாளி நிசாம் பஷீர் இயக்குகிறார். உணர்வுப்பூர்வமான கதைக்களத்தில், அற்புதமான நடிகர்களின் நடிப்பில், முன்னனி தொழில்நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில் தனித்துவமான மற்றும் மறக்க முடியாத சினிமா அனுபவமாக உருவாகிறது.
படத்தை பிருத்திவிராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுப்ரியா மேனன், முகேஷ் மேத்தா மற்றும் சி.வி. சாரதி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
அனிமல் திரைப்படத்திற்கு அட்டகாசமாக இசையமைத்த ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார்.
படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில்…