Monday, March 24, 2025
spot_img
HomeCinema‘குண்டான் சட்டி' சினிமா விமர்சனம் 

‘குண்டான் சட்டி’ சினிமா விமர்சனம் 

Published on

முழுக்க முழுக்க குழந்தைகளை குஷிப்படுத்தும்படியான திரைப்படங்கள் எப்போதாவதுதான் வருகின்றன. அந்த வரிசையில் இப்போது வந்திருக்கிறது ‘குண்டான் சட்டி.’ அதுவும் 2டி அனிமேஷன் படைப்பாக!

குழந்தைகள் கொண்டாடும் கதையம்சத்தோடு, அவர்களுக்கு நல்லது கெட்டது சொல்லிக் கொடுக்கிற பாடமாகவும் இந்த படத்தை இயக்கியிருப்பது 12 வயது நிரம்பிய ஒரு பெண் குழந்தை. பெயர் பி கே அகஸ்தி.

வயல்வெளிகள், மூங்கில் தோப்புகள், பாய்ந்தோடும் நதி என்றிருக்கும் அந்த பசுமையான கிராமத்தில் குப்பனும் சுப்பனும் உயிருக்குயிரான நண்பர்கள். அவர்களைப் போலவே அவர்களின் பிள்ளைகள் குண்டேஸ்வரன் (குண்டான்) ‘சட்டி’ஸ்வரன் (சட்டி) இருவரும் நெருங்கிய நண்பர்களாக வலம் வருகிறார்கள்.

குண்டானும் சட்டியும் கிராமத்திலுள்ள கோயிலுக்கு நன்மை செய்ய நினைக்கிறார்கள். தலையில் சட்டியோடு பிறந்திருக்கும் சட்டிஸ்வரனுக்கு ஒருவித விசேச சக்தியிருக்கிறது. அதன் மூலம் நினைத்ததை செய்கிறார்கள். அதனால், கோயில் நிலத்தில் விவசாயம் செய்யும் பண்ணையாரின் கோபத்துக்கு ஆளாகிறார்கள்.

அடுத்ததாக ஆதரவற்றோர் இல்லத்துக்கு உதவி செய்ய நினைக்கிறார்கள். அதனால், கொரோனா காலத்தில் மளிகைப் பொருட்களைப் பதுக்கிய கடை முதலாளியின் பகை வந்து சேர்கிறது.

மிகமிக வறுமை சூழ்ந்த நிலையிலிருக்கும் ஒரு குடும்பத்துக்கு நல்லது செய்கிறார்கள். அதனால், அந்த ஊரில் அநியாய வட்டிக்கு கடன் கொடுப்பவரின் எதிர்ப்பைச் சம்பாதிக்கிறார்கள்.

மூன்று தரப்பும் குண்டான் சட்டி மீது புகார் கொடுக்க, அந்த சிறுவர்களின் அப்பாக்கள் அவர்களை தண்டிக்கும் விதமாக மூங்கில் மரத்தில் கட்டி ஆற்றில் இறக்கிவிடுகிறார்கள்.

சிறுவர்கள் ஆற்றில் மிதந்து பக்கத்து கிராமத்தின் வாழைத் தோப்புக்குள் நுழைகிறார்கள். அங்குள்ள ஒட்டுமொத்த மரங்களிலுள்ள வாழைப்பழங்களையும் தின்று தீர்க்கிறார்கள். அதேபோல் அடுத்த கிராமத்திற்கு போய் குறும்பான செயலொன்றைச் செய்து பெரும் நஷ்டத்தை உருவாக்குகிறார்கள். இப்படி தொடர்ந்து அந்த சிறுவர்கள் எக்குத்தப்பாக நடந்துகொள்ள, ஒரு கட்டத்தில் அவர்கள் சுற்றி வளைக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட எல்லாருமாக சேர்ந்து அவர்களுக்கு பெரியளவில் தண்டனை தர முடிவெடுக்கிறார்கள். அதிலிருந்து சிறுவர்கள் தப்பினார்களா இல்லையா என்பது படத்தின் கிளைமாக்ஸ்.

குண்டான், சட்டி இருவரின் அனிமேஷன் தோற்றம் ரசிக்கும்படியிருக்கிறது. ஊரில் ஜாலியாக சுற்றித் திரிவது, சட்டி’யின் சக்தியால் நல்லது செய்து தண்டனையை அனுபவிப்பது, ஏடாகூடமான செயல்களைச் செய்து ஆபத்தில் சிக்குவது என அவர்களுக்கான காட்சிகள் அத்தனையும் குழந்தைகளை மட்டுமல்ல பெற்றோர்களையும் நிச்சயம் கவரும்.

குப்பன், சுப்பன், கோயில் அர்ச்சகர், வட்டிக்கு பணம் கொடுப்பவர், பண்ணையார், சலவைத் தொழிலாளர்கள் என படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கும் விதமும் காட்சிகளும் மிகமிக நேர்த்தி.

குளியல் சோப், டூத் பிரஷ் இரண்டும் பேசுவது சிறுபிள்ளைகளை சிரிப்பு மூட்டும். அதிலிருக்கும் அறிவுரை யோசிக்க வைக்கும்.

தன் மாணவர்கள் தவறு செய்யும்போது ஆசிரியர் என்பவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது அந்த கடைசிக் காட்சி.

திரைக்கதை, வசனம் எழுதிய அரங்கன் சின்னத்தம்பி, சிட்டுக் குருவி போல வட்டம் அடிப்போம் நாங்க’ என்றெழுதிய பாடலுக்கு எம் எஸ் அமர்கீத் (பிரபல இசையமைப்பாளர் செளந்தர்யனின் மகன் இவர்) போட்டுள்ள இசை வாண்டுகளை கண்டிப்பாக ஆட்டம் போட வைக்கும். ‘ஓடஓட விரட்டிப் பிடிப்போம் வெள்ளாட்டை’ பாடலின் துள்ளலிசையும் மனதில் தங்கும்!

கதையின் ஹீரோ தலையில் சட்டியுடன் வருவது, அனிமேஷன் வடிவமைப்பில் நம்மூர் மனிதர்களைப் பார்ப்பது வித்தியாசமான அனுபவம் தருவது உறுதி.

உங்கள் வீட்டு குட்டிச் சுட்டிக்கு நிச்சயம் பிடிக்கும் இந்த குண்டான் சட்டி. அந்தளவுக்கு படம் கெட்டி!

Latest articles

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...

அரசியல் தலையீடுகளால் மாணவ சமூகம் எப்படியெல்லாம் பாழாகிறது என்பதை இந்த படம் எடுத்துக் காட்டியுள்ளது! -‘அறம் செய்’ படம் பார்த்து பாராட்டிய தொல் திருமாவளவன்

  அறம் செய் என்ற திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துகொண்டு படத்தை பார்த்த தொல்.திருமாவளவன் தன் கருத்துகளை பகிர்ந்துகொண்டபோது... இயக்குநர் எஸ்...

More like this

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...