Monday, March 24, 2025
spot_img
HomeCinemaநடிப்பு, இசை இரண்டிலும் ஜீவி பிரகாஷ் தந்த அர்ப்பணிப்பு பெரிது! -'கள்வன்' பட இயக்குநர் பெருமிதம்

நடிப்பு, இசை இரண்டிலும் ஜீவி பிரகாஷ் தந்த அர்ப்பணிப்பு பெரிது! -‘கள்வன்’ பட இயக்குநர் பெருமிதம்

Published on

ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்குநராக அறிமுகமாகும் ‘கள்வன்’ படத்தில் பாரதிராஜா, இவானா மற்றும் தீனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ள இந்த பரபரப்பான அட்வென்ச்சர், ஆக்‌ஷன் திரைப்படம் வரும் ஏப்ரல் 4, 2024 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.

இயக்குநர்களின் கற்பனையை வசீகரிக்கும் காட்சிகளாக மாற்றும் திறமை படைத்தவர்கள் ஒளிப்பதிவாளர்கள். ஆனால், ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் இரண்டிலும் சிறந்து விளங்கும் ஒருவர் படம் இயக்கும்போது நிச்சயம் அது சிறப்பானதாக இருக்கும். அப்படித்தான் ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்குநராக அறிமுகமாகும் ‘கள்வன்’ படம் சிறப்பாக வந்துள்ளது.

படம் பற்றி பி.வி. ஷங்கர் பேசியபோது, ​​“சில ஜானர் படங்கள் மொழி மற்றும் பிராந்திய எல்லைகளைத் தாண்டி பார்வையாளர்களைக் கவரும். ஒரு ஒளிப்பதிவாளராக காடுகளை அடிப்படையாகக் கொண்டு வரக்கூடிய படங்கள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாக உணர்ந்தேன். ஆக்‌ஷன், அட்வென்ச்சர், எமோஷன் எனப் பல த்ரில்லர் தருணங்களை ஒன்றாகக் கொண்ட இந்தப் படம் பார்வையாளர்களுக்குத் தரமான எண்டர்டெயின்மெண்ட் படமாக இருக்கும். அழகான காதல், நகைச்சுவை என ஒரு ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படத்திற்கான அனைத்து அம்சங்களையும் இந்தப் படம் கொண்டுள்ளது.

இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு சாருக்கு நன்றி. பலதரப்பட்ட ஜானர்களின் அடிப்படையில் பாராட்டத்தக்க பொழுதுபோக்குகளை கொடுக்க வேண்டும் என்ற அவரது ஆர்வத்தின் வெளிப்பாடுதான் இந்தப் படம். அவரிடமிருந்து ஒப்புதல் பெறுவதை விட, நான் கதையாக விவரித்ததை காட்சிப்படுத்துவது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால், படத்தின் அவுட்புட்டில் ஒட்டுமொத்த குழுவும் மகிழ்ச்சியாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

‘கள்வன்’ படத்திற்காக, ஜி.வி.பிரகாஷ் குமாரின் அர்ப்பணிப்பு அளப்பரியது. ஒரே நேரத்தில் இசை மற்றும் நடிப்பு இரண்டிலும் கவனம் செலுத்துவது எளிதானது கிடையாது. ஆனால், இந்தப் படத்துக்கான இயல்பான நடிப்பு மற்றும் அழகான பாடல்கள் கொடுத்து எங்கள் எதிர்பார்த்ததை சிறப்பாக பூர்த்தி செய்துள்ளார். இவானாவும் திறமையான நடிகை. இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். பாரதிராஜா சாருடன் பணிபுரிய வேண்டும் என்பது பலருடைய கனவு. அந்தக் கனவு எனக்கு நிறைவேறி இருப்பதில் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்” என்றார்.

தொழில்நுட்ப குழு:

தயாரிப்பு இல்லம் – ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி,
தயாரிப்பாளர்: ஜி.டில்லி பாபு,
ஒளிப்பதிவு & இயக்கம்: பி.வி. ஷங்கர்,
பாடல்கள் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்,
பின்னணி இசை: ரேவா,
எடிட்டிங்: சான் லோகேஷ்,
கலை: என்.கே. ராகுல்

Latest articles

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...

அரசியல் தலையீடுகளால் மாணவ சமூகம் எப்படியெல்லாம் பாழாகிறது என்பதை இந்த படம் எடுத்துக் காட்டியுள்ளது! -‘அறம் செய்’ படம் பார்த்து பாராட்டிய தொல் திருமாவளவன்

  அறம் செய் என்ற திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துகொண்டு படத்தை பார்த்த தொல்.திருமாவளவன் தன் கருத்துகளை பகிர்ந்துகொண்டபோது... இயக்குநர் எஸ்...

More like this

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...