ஜெயா டிவியில் வரும் ஆயுத பூஜை தினமான அக்டோபர் 23, திங்கட்கிழமையன்று சிறப்பு காலை மலர் நிகழ்ச்சியில் ’ஜெயில்’ பட புகழ் நடிகை அபர்ணதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று தன் திரையுலக அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
விஜயதசமி நாளன்று ஒளிபரப்பாகவுள்ள காலை மலர் நிகழ்ச்சியில் நடிகை ரோகிணி பங்கேற்று தான் கடந்து வந்த பாதையையும், சந்தித்த மனிதர்கள் பற்றியும் மனம் திறந்து பேசுகிறார். இந்நிகழ்ச்சியானது ஆயுத பூஜை நாளன்றும், விஜயதசமி தினத்தன்றும் காலை 7:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.