Monday, March 24, 2025
spot_img
HomeMovie Review‘இறைவன்' சினிமா விமர்சனம்

‘இறைவன்’ சினிமா விமர்சனம்

Published on

‘இளம்பெண்களை கொன்று குவிக்கும் சைக்கோ கில்லரை வேட்டையாடும் போலீஸ்’ என்ற சிம்பிளான ஒன்லைனில் உருவான ‘இறைவன்.’

நகரத்தில் இளம்பெண்கள் கடத்தப்பட்டு, கால்கள் அறுக்கப்பட்டு, கண்கள் தோண்டப்பட்டு, வாய் உடைக்கப்பட்டு குரூரமாக கொலை செய்யப்படுவது தொடர்கிறது. மக்களிடம் பயம் தொற்றுகிறது.

காவல்துறை உயரதிகாரியான ஜெயம் ரவி தலைமையிலான குழு கொலைகளை செய்பவனை தேடிப்பிடித்து சிறையிலடைக்கிறது. அங்கிருந்து அந்த சைக்கோ தப்பிவிட கொலைகள் தொடர்கிற சூழ்நிலை. மீண்டும் களமிறங்குகிறது காவல்துறை. அதன் ரிசல்ட் என்ன என்பதே திரைக்கதை. இயக்கம் ஐ அஹமது

ஏற்றிருக்கும் போலீஸ் வேடத்துக்கு உடற்கட்டாலும் உடல்மொழியாலும் தேவையான கம்பீரத்தை கொடுத்திருக்கிறார் ஜெயம் ரவி.

கதாநாயகனை ஒருதலையாக காதலிப்பதை தவிர நயன்தாராவுக்கு பெரிதாய் எந்த வேலையுமில்லை. அந்த வேலையை இயல்பாக செய்திருக்கிறார்.

சைக்கோவாக ராகுல் போஸ். பெண்களை கொடூரமாக சித்ரவதை செய்து அவர்கள் வலியில் துடிப்பதை ரசித்து, குரூரமாக கொலை செய்யும் காட்சிகளில் உயிர் நடுங்கச் செய்கிறார்.

மற்றொரு சைக்கோவாக வினோத் கிஷன். அளவோடு நடித்திருந்தால் பாராட்டியிருக்கலாம்.

தன் மகளின் சடலத்தைப் பார்த்து, அவளுக்கு வலிக்காமல் நானே போஸ்ட் மார்ட்டம் செய்வேன்’ என்று சொல்லி கதறியழும் சார்லியின் நடிப்பு மனம் கனக்கச் செய்கிறது.

புத்திசாலித்தனமாக எதையும் செய்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும்படி உருவாக்கப்பட்ட காவல்துறை அதிகாரி வேடங்களில் ஆஷிஷ் வித்யார்த்தி, பக்ஸ்… இருவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஹீரோவுக்கு நண்பனாக வருகிற நரேன் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் பங்களிப்பு கச்சிதம்.

யுவனின் பின்னணி இசை மிரட்டலான காட்சிகளுக்கு விறுவிறுப்பு கூட்டியிருக்கிறது.

ஹரி வேதாந்தின் ஒளிப்பதிவு நேர்த்தி.

சைக்கோ கில்லர் இருக்கும் இடத்துக்கு போலீஸ் மிக சாதாரணமாக போய்வருவதெல்லாம் படத்திலிருக்கும் புதுமை.

ரத்த ஆறு ஓடுகிற சைக்கோ கில்லர் படங்கள் உங்கள் சாய்ஸ் என்றால் ‘இறைவனை’ பார்க்க தியேட்டருக்கு கிளம்பலாம். மற்றவர்கள் அப்படியான படங்களை எடுப்பவர்களை திருத்த ‘கடவுளை’ பிரார்த்திக்கலாம்!

Latest articles

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...

அரசியல் தலையீடுகளால் மாணவ சமூகம் எப்படியெல்லாம் பாழாகிறது என்பதை இந்த படம் எடுத்துக் காட்டியுள்ளது! -‘அறம் செய்’ படம் பார்த்து பாராட்டிய தொல் திருமாவளவன்

  அறம் செய் என்ற திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துகொண்டு படத்தை பார்த்த தொல்.திருமாவளவன் தன் கருத்துகளை பகிர்ந்துகொண்டபோது... இயக்குநர் எஸ்...

More like this

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...
‘இளம்பெண்களை கொன்று குவிக்கும் சைக்கோ கில்லரை வேட்டையாடும் போலீஸ்' என்ற சிம்பிளான ஒன்லைனில் உருவான ‘இறைவன்.' நகரத்தில் இளம்பெண்கள் கடத்தப்பட்டு, கால்கள் அறுக்கப்பட்டு, கண்கள் தோண்டப்பட்டு, வாய் உடைக்கப்பட்டு குரூரமாக கொலை செய்யப்படுவது தொடர்கிறது. மக்களிடம் பயம் தொற்றுகிறது. காவல்துறை உயரதிகாரியான ஜெயம் ரவி தலைமையிலான குழு கொலைகளை செய்பவனை தேடிப்பிடித்து சிறையிலடைக்கிறது. அங்கிருந்து அந்த சைக்கோ தப்பிவிட கொலைகள் தொடர்கிற சூழ்நிலை. மீண்டும்...‘இறைவன்' சினிமா விமர்சனம்