புதுயுகம் தொலைக்காட்சியில் வருகிற கிறிஸ்துமஸ் அன்று காலை 11 மணிக்கு ‘கேக் எடு கொண்டாடு’ என்ற கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகவிருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் கிருத்திகா ராதா கிருஷ்ணன் அவர்கள் முட்டை இல்லாமல் ஓவன் இல்லாமல் எளிய முறையில் கிறிஸ்துமஸ் கேக் செய்வது எப்படி என்பதை விளக்கமாக கற்றுத் தருவது மட்டுமல்லாமல் கிறிஸ்துமஸ் பண்டிகையின் முக்கிய நோக்கமான பிறருக்கு கொடுத்து உதவும் உயர்ந்த பண்பை வெளிப்படுத்தும் விதமாக தான் தயார் செய்த கேக்கை கானா பாலா, இயக்குநர் பிரபு சாலமோன், அந்தோணி தாஸ் போன்ற பிரபலங்களுக்கு கொடுப்பதற்காக தானே செல்கிறார்.
கேக்கை பகிர்வது மட்டுமில்லாமல் அவர்களோடு ஜாலி அரட்டை, சுவாரஸ்ய உரையாடல்களோடு நிகழ்ச்சி முடிகிறது.