Sunday, January 19, 2025
spot_img
HomeMovie Reviewபயமறியா பிரம்மை சினிமா விமர்சனம்

பயமறியா பிரம்மை சினிமா விமர்சனம்

Published on

மக்களுக்கு கதை புரியுமா புரியாதா? பிடிக்குமா பிடிக்காதா? வெற்றி பெறுமா பெறாதா? இப்படி எதைப் பற்றியும் யோசிக்காமல், தனக்கு வித்தியாசமாக படம் எடுக்கத் தெரியும் என்பதை நிரூபிப்பதற்காக மட்டுமே சிலர் படம் இயக்குவதுண்டு. அந்த வரிசையில் இணைவதற்காக வரிந்துகட்டி களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் ராகுல் கபாலி

ஜெகதீஷ் 25 வருடங்களில் 96 கொலைகள் செய்ததற்காக சிறையிலிருப்பவன். அவனைப் பற்றி, அவன் ஏன் அத்தனை கொலைகள் செய்தான் என்பது பற்றி தெரிந்துகொண்டு, கதையாக எழுதும் நோக்கத்துடன் அவனை எழுத்தாளர் ஒருவர் சந்திக்கிறார். ஜெகதீஷ் அவரிடம், நடந்தது என்ன?’ என்பதை சொல்லச் சொல்ல அந்த சம்பவங்கள் காட்சிகளாக விரிவதே கதையின் போக்கு…

இது ஒருபுறமிருக்க, புத்தகமொன்றில் ஜெகதீஷ் பற்றி படிக்கும் வாசகர்கள் தாங்களே ஜெகதீஷாக மாறுவதும், கொலைகள் செய்வதுமாக தொடர்கிறது திரைக்கதையின் மற்றொரு டிராக்.

கொலைகளைக்கூட கலையாக செய்கிற ஜெகதீஷாக புதுமுகம் ஜெடி. பெரும்பாலான காட்சிகளை வசன உச்சரிப்பால் மட்டுமே நகர்த்த வேண்டியிருக்க அவரிடமிருந்து அதற்கேற்ற அலட்டலற்ற நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது.

சிறைக்குள்ளிருக்கும் கொடூர கொலைகாரனை, சிறைக்கு வெளியிலிருந்து பேட்டி காண்கிற எழுத்தாளராக வினோத் சாகர். எதிர்பாராத தருணத்தில் கொலைகாரனின் பிடியில் சிக்கிவிட பயத்தில் மிரளும்போது மட்டும் கவனம் ஈர்க்கிறார்.

புத்தகத்தைப் படித்து ஜெகதீஷாக மாறி கொலைகள் செய்கிறவர்களாக ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா இருவரும் சில விநாடிகள் மிரட்டலான பங்களிப்பை வழங்க, குரு சோமசுந்தரத்தின் நடிப்பு சற்றே கூடுதலாய் கவர்கிறது.

ஜான் விஜய், விஸ்வாந்த், திவ்யா கணேஷ் என மற்றவர்களும் குறை வைக்கவில்லை.

கே தனது பின்னணி இசையில் அமைதிக்கு அதிக இடம் கொடுத்து அடக்கி வாசித்திருக்க, நந்தாவின் ஒளிப்பதிவில் ஓரளவு திருப்தி கிடைக்கிறது.

கமர்ஷியல் மசாலா கலக்காத, கன்னாபின்னாவென குழப்புகிற, படு வித்தியாசமான படங்கள் உங்களுக்கு பிடிக்குமென்றால், இந்த ‘பயமறியா பிரம்மை‘யின் உருவாக்கமும் உங்களை பிரமிக்க வைக்கலாம்.

 

Latest articles

‘திருக்குறள்’ திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டார் முதல்வர் மு க ஸ்டாலின்!

‘காமராஜ்’, ‘WELCOME BACK GANDHI’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தமிழரின் பெருமைமிகு அடையாளம் திருக்குறளை திரைப்படமாகத்...

வசூல்ராஜாவான மதகஜராஜா’வை ரிலீஸ் செய்ய உதவியவர்களுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்! -இயக்குநர், தயாரிப்பாளர் கே.ஆர் அறிக்கை

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை: சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர் சி...

15 வருடங்களாக தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அது சிவன் அருளால் இந்த படம் மூலம் நிறைவேறியது பெருமையாக இருக்கிறது! -கண்ணப்பா படத்தின் பிரஸ் மீட்டில் நடிகர் விஷ்ணு மஞ்சு...

பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியமான ‘கண்ணப்பா' திரைப்படத்தில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு...

சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க, 'விலங்கு' இணைய தொடரை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி...

More like this

‘திருக்குறள்’ திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டார் முதல்வர் மு க ஸ்டாலின்!

‘காமராஜ்’, ‘WELCOME BACK GANDHI’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தமிழரின் பெருமைமிகு அடையாளம் திருக்குறளை திரைப்படமாகத்...

வசூல்ராஜாவான மதகஜராஜா’வை ரிலீஸ் செய்ய உதவியவர்களுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்! -இயக்குநர், தயாரிப்பாளர் கே.ஆர் அறிக்கை

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை: சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர் சி...

15 வருடங்களாக தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அது சிவன் அருளால் இந்த படம் மூலம் நிறைவேறியது பெருமையாக இருக்கிறது! -கண்ணப்பா படத்தின் பிரஸ் மீட்டில் நடிகர் விஷ்ணு மஞ்சு...

பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியமான ‘கண்ணப்பா' திரைப்படத்தில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு...
மக்களுக்கு கதை புரியுமா புரியாதா? பிடிக்குமா பிடிக்காதா? வெற்றி பெறுமா பெறாதா? இப்படி எதைப் பற்றியும் யோசிக்காமல், தனக்கு வித்தியாசமாக படம் எடுக்கத் தெரியும் என்பதை நிரூபிப்பதற்காக மட்டுமே சிலர் படம் இயக்குவதுண்டு. அந்த வரிசையில் இணைவதற்காக வரிந்துகட்டி களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் ராகுல் கபாலி ஜெகதீஷ் 25 வருடங்களில் 96 கொலைகள் செய்ததற்காக சிறையிலிருப்பவன். அவனைப் பற்றி, அவன் ஏன் அத்தனை கொலைகள்...பயமறியா பிரம்மை சினிமா விமர்சனம்