Monday, March 24, 2025
spot_img
HomeCinemaரஞ்சித், மாரி செல்வராஜ், அடுத்ததாக ராஜாஜி. நவம்பர் 17-ல் ரிலீஸாகும் ‘அம்புநாடு ஒம்பது குப்பம்'...

ரஞ்சித், மாரி செல்வராஜ், அடுத்ததாக ராஜாஜி. நவம்பர் 17-ல் ரிலீஸாகும் ‘அம்புநாடு ஒம்பது குப்பம்’ படத்தில் பரபரப்பு சம்பவங்கள்!

Published on

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக உருவாகியுள்ள ‘அம்புநாடு ஒம்பது குப்பம்’ என்ற படம் நவம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள, பல சமூக மக்கள் வாழ்கிற பின்தங்கிய கிராமம் அது. அங்கே ஒடுக்கப்பட்ட மக்கள் பொருளாதார முன்னேற்றம் அடைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிற, சக மனிதனை ஜாதியின் பெயரால் ஒதுக்கி வைக்கிற, அதற்காக எந்த எல்லைக்கும் போகிற, அதன் வழியாக ஊரை ஆள வேண்டும் என்கிற வெறியோடு இரு தரப்பு பண்ணையார்கள்…

அந்த ஊரில் கோவில் திருவிழா வருகிறது. திருவிழாவில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் கோவில் பூசாரி வைத்திருந்த தாம்பூலத்தட்டை தொட்டு விபூதி எடுத்து விடுகிறார். அதனால் கலவரம் ஏற்படுகிறது, பண்ணையார்கள் தங்களுக்குள் இருக்கும் அதிகார பகையை ஒதுக்கிவைத்து விட்டு இணைகிறார்கள். ‘தாம்பூலத் தட்டை தொட்டது தீட்டாகிவிட்டது’ என்று சொல்லி நாட்டு கூட்டம் நடத்த திட்டமிடுகிறார்கள்.

அதே பகுதியில், ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக விடுதலைக்காக போராடக்கூடிய அரசியல் இயக்கம் ‘நாட்டு கூட்டத்திற்கு போகக்கூடாது, சட்டப்படி பிரச்சனையை எதிர்கொள்வோம்’ என்று சொல்லி பட்டியல் சமூக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

அதை தெரிந்துகொண்ட பண்ணையார்கள், இயக்கத்தினரிடம் தாங்கள் தோற்றுவிட்டால், தங்களது ஜாதி கௌரவத்திற்கு இழிவு ஏற்பட்டுவிடும் என்று கருதி தாம்பூலத் தட்டை தொட்ட இளைஞரை கொலை செய்து விடுகிறார்கள். அதன்பிறகு நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சி தரும்படி, பரபரப்பாக இருக்கும்படி திரைக்கதை அமைத்துள்ளார் படத்தின் இயக்குநர் ஜி.ராஜாஜி.

படத்தில் இடம்பெற்றுள்ள கருத்தாழமிக்க பாடல்களுக்கு பிரபல பாடகர் அந்தோணி தாசன் இசையமைத்துள்ளார். ஜேம்ஸ் வசந்தன் பின்னணி இசையமைத்துள்ளார்.

படக்குழு:-
தயாரிப்பு: பூபதி கார்த்திகேயன்
மூலக்கதை: துரை குணா
எழுத்து, இயக்கம்: ஜி.ராஜாஜி
ஒளிப்பதிவு: மகேஷ்
பாடல்களுக்கு இசை: அந்தோணி தாசன்
பின்னணி இசை: ஜேம்ஸ் வசந்தன்
எடிட்டிங்: பன்னீர் செல்வம்
பாடல்கள்: லா வரதன், கடல் வேந்தன்
நடனம்: ராதிகா
சண்டைப் பயிற்சி: குங்பூ குணா
மக்கள் தொடர்பு: விஎம் ஆறுமுகம், ராஜ்குமார்

Latest articles

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...

அரசியல் தலையீடுகளால் மாணவ சமூகம் எப்படியெல்லாம் பாழாகிறது என்பதை இந்த படம் எடுத்துக் காட்டியுள்ளது! -‘அறம் செய்’ படம் பார்த்து பாராட்டிய தொல் திருமாவளவன்

  அறம் செய் என்ற திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துகொண்டு படத்தை பார்த்த தொல்.திருமாவளவன் தன் கருத்துகளை பகிர்ந்துகொண்டபோது... இயக்குநர் எஸ்...

More like this

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...