Tuesday, April 22, 2025
spot_img
HomeCinemaசிவகார்த்திகேயன் இந்த படத்திற்காக நிஜ ராணுவ வீரர்களிடம் பயிற்சியெடுத்து நடித்துள்ளார்! -அமரன் படத்தின் பிரஸ் மீட்டில்...

சிவகார்த்திகேயன் இந்த படத்திற்காக நிஜ ராணுவ வீரர்களிடம் பயிற்சியெடுத்து நடித்துள்ளார்! -அமரன் படத்தின் பிரஸ் மீட்டில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேச்சு

Published on

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள ‘அமரன்’ திரைப்படம் அக்டோபர் 31ம் தேதி தீபாவளியன்று உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.

முன்னதாக படம் பற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”சோனி பிக்சர்ஸ்ஸிடமிருந்து அமரன் படம் இயக்குவது பற்றிய எனக்கு வாய்ப்பு வந்தது. இது பற்றி உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்து படத்தை வழங்குவதற்காக கேட்டோம். அவர் அமரன் படத்தின் கதையை கேட்டுவிட்டு மிகவும் பிடித்துப் போக தானும் தயாரிப்பு பார்ட்னராக இணைவதாக சொல்லி இணைந்தார். அன்று முதல் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது.

ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாறு மையமாக வைத்து இக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கான அனுமதியை அவரது குடும்பத்தாரிடமிருந்து முறைப்படி பெற்றிருக்கிறோம். மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் பொருத்தமாக இருப்பார் என்று படக்குழு முடிவு செய்தது. இதையடுத்து சிவகார்த்திகேயனிடம் கதை கூறியதும் அவருக்கும் மிகவும் பிடித்தது. படத்தின் ஸ்கிரிப்ட்டை தன் கையில் வாங்கி வைத்துக்கொண்டு அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டார், துப்பாக்கி சுடுவது, ராணுவப் பயிற்சி போன்றவற்றை டெல்லி சென்று ராணுவ வீரர்களிடமே  எடுத்துக் கொண்டார். தனது உடற்கட்டையும் அதற்கேற்றார் போல் பயிற்சிகள் செய்து அசல் ராணுவ மேஜர்  போலவே இந்த  மாறிவிட்டார்.

பல்வேறு துணிச்சலான காட்சிகள்,  துப்பாக்கி சூடும் காட்சிகள், போர்க் காட்சிகள், தீவிரவாதிகள்.மீது  தாக்குதல் போன்றவற்றை எங்கெல்லாம் முகுந்த் வரதராஜன் பணியாற்றி மேற்கொண்டாரோ அந்த இடங்களுக்கு சென்று நடிக்க அதனை படமாக்கி இருக்கிறோம்.

இதில் சாய் பல்லவி முகுந்த் வரதராஜன் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கி றார். இது பற்றி முகந்த் வரதராஜன் மனைவியை சந்தித்து சாய் பல்லவி  நேரில் சந்தித்து பேசி அவரது அனுபவத்தையும் கேட்டறிந்தார். பின்னர் சாய் பல்லவி அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்திருக்கிறார்.

படத்தில் காதல் காட்சிகள் இடம்பெறுகிறது அது எல்லாம் திரைக்கதைக்காக சற்று சுவாரசியமாக அமைத்திருந்தாலும்  முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்கும்  விதமாக அமைக்கப்பட வில்லை. இப்படம் முடிவடைந்து டெல்லியில் 900-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அதிகாரிகள் அவர்களது குடும்பத்தினர் பார்த்து பாராட்டு தெரிவித்தனர்

மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையை படமாக்குவதற்காக முறைப்படி ராணுவ அதிகாரியிடம் படத்தின் கதை ஸ்கிரிப்ட் அளித்து அனுமதி பெறப்பட்டது. இதுதவிர படம் முடிந்த பிறகு அவர்கள் படத்தையும் சென்சார் அதிகாரிகள் போல பார்த்து , பாராட்டினார்கள்  இந்த படத்தை இந்தியா முழுவதும் உள்ள ராணுவ முகங்களில் திரையிட வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

படத்தை உலகநாயகன் கமலஹாசன் பார்த்து பாராட்டினார். இந்த படம் சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிக அளவிலான ஸ்கிரீன்களில் வெளியாகும் படம் மட்டுமல்ல அவர் நடிக்கும் பான் இந்திய படமாகவும் அமரன் அமைந்திருக்கிறது” என்றார்.

 

 

 

Latest articles

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

More like this

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...
error: Content is protected !!