Sunday, May 18, 2025
spot_img
HomeCinemaஅடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்ந்தெடுக்கப் போகிறேன்; நடிப்புக்குத் தீனி போடும் கதைகளில் நடிக்க விரும்புகிறேன்! -நடிகை...

அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்ந்தெடுக்கப் போகிறேன்; நடிப்புக்குத் தீனி போடும் கதைகளில் நடிக்க விரும்புகிறேன்! -நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்

Published on

 

‘ஒரு அடார் லவ்’ படம் மூலம் வைரல் ஆனவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். ஆனால் அவர் இப்போது அதைவிட வைரலான தருணத்தில் இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரது சினிமா வளர்ச்சி, ஆக்டிங் ஸ்டைல் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றி பகிர்ந்திருக்கிறார்.

நடிகர் அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அர்ஜூன் தாஸூடன் அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. நடிகர் அஜித் மற்றும் அர்ஜூன் தாஸூடன் நடித்தது டபுள் தாமாக்கா என மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருப்பவர் ரசிகர்களின் அன்பிற்கு நெகிழ்ச்சியாக நன்றியும் தெரிவித்திருக்கிறார் பிரியா. அடுத்தடுத்தும் இதே போன்று வலுவான திறமையான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாகவும் அவர் கூறுகிறார். நடிப்புக்குத் தீனி போடும் விதமாக ‘குட் பேட் அக்லி’ படத்தில் அவரது நித்யா கதாபாத்திரம் அமைந்தது. அஜித்துடன் நடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறியதாக சொல்லி இருப்பவர் அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டதாகவும் சொல்கிறார்.

இந்தப் படத்தில் இன்னொரு மைல்கல் நடிகை சிம்ரனின் ‘சுல்தானா…’ பாடலை ரீகிரியேட் செய்து பிரியா நடனமாடியது. சிம்ரன் நடனத்துடன் ஒப்பிடும்போது தன்னுடைய நடனத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என அர்ஜூன் தாஸிடம் தெரிவித்ததாகவும் சொல்கிறார்.

மேலும் பிரியா பகிர்ந்து கொண்டதாவது, “அடுத்தடுத்து நான் நடிக்க இருக்கும் படங்களை கவனமுடன் தேர்ந்தெடுத்தெடுக்கப் போகிறேன். இயக்குநர் மணி ரத்னம் படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும். ஆக்‌ஷன் ரோலிலும் நடிக்க வேண்டும். சினிமாவில் அடுத்தடுத்து உயரங்கள் தொடுவதுதான் மகிழ்ச்சி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதும் என்னுடைய கரியரில் ஒரு பகுதிதான். எப்போதும் என் மீது கவனம் இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் செய்வதில் முழு கவனம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.

 

Latest articles

காதல் உணர்வை பிரதிபலிக்கும் ஆழி பாடல் வெளியீடு… விழாவுக்கு வராத நாயகன், நாயகியை கடுமையாக சாடிய தயாரிப்பாளர் கே ராஜன்

லட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனின் பேரன் ஆரியன் இசையமைப்பில், காதல் உணர்வை இழை பிரித்து, காதலர்களின் சின்ன சின்ன...

யோகிபாபு இந்த படத்தில் இன்னொரு ஹீரோ! -‘ஏஸ்’ பட நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில், மலேசியா நாட்டின் பின்னணியில் பிரமாண்டமான பொருட்செலவில், அட்டகாசமான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம் ‘ஏஸ்.'...

பாலிவுட் ஸ்டைலில் படம் எடுக்க வேண்டும்! -இந்தியா மீதான அபிமானத்தை பகிர்கிறார் ‘மிஷன்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங்’ பட ஹீரோ டாம் குரூஸ்

டாம் குரூஸின் மிஷன்: இம்பாசிபிள் - தி ஃபைனல் ரெக்கனிங் மே 17 அன்று இந்தியாவில் பிரமாண்டமாக ஆங்கிலம்,...

இந்த படத்தை கும்கி போன்ற எந்த படத்துடனும் ஒப்பிட முடியாது; இது முற்றிலும் வேறு மாதிரியான கதைக்களம்! -‘படை தலைவன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நாயகன் சண்முக பாண்டியன் பேச்சு

கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக்...

More like this

காதல் உணர்வை பிரதிபலிக்கும் ஆழி பாடல் வெளியீடு… விழாவுக்கு வராத நாயகன், நாயகியை கடுமையாக சாடிய தயாரிப்பாளர் கே ராஜன்

லட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனின் பேரன் ஆரியன் இசையமைப்பில், காதல் உணர்வை இழை பிரித்து, காதலர்களின் சின்ன சின்ன...

யோகிபாபு இந்த படத்தில் இன்னொரு ஹீரோ! -‘ஏஸ்’ பட நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில், மலேசியா நாட்டின் பின்னணியில் பிரமாண்டமான பொருட்செலவில், அட்டகாசமான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம் ‘ஏஸ்.'...

பாலிவுட் ஸ்டைலில் படம் எடுக்க வேண்டும்! -இந்தியா மீதான அபிமானத்தை பகிர்கிறார் ‘மிஷன்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங்’ பட ஹீரோ டாம் குரூஸ்

டாம் குரூஸின் மிஷன்: இம்பாசிபிள் - தி ஃபைனல் ரெக்கனிங் மே 17 அன்று இந்தியாவில் பிரமாண்டமாக ஆங்கிலம்,...
error: Content is protected !!